*
வெகு நேரமாக சுழன்றுக் கொண்டிருந்தது காதருகே
ரீங்கரிக்கும் ஒரு கொசுவைப் போல
சற்றுமுன் நிகழ்ந்த உரையாடல்
தொலைவில் கலங்கிய கரிய நிழலின் பிம்பமென
நெளிந்தபடி சிறுத்துப் போகும் உன் உருவை
கானல் நெய்து கொண்டிருக்கிறது
அர்த்தம் உணரும் வெளியில்
கால்கள் சிக்க அசைவற்று நிற்கும் சதுப்பாகிறது
இந்நிலம் கரும்பாசி நிறத்தில்
பிறகும் முளைத்துக் கொண்டேயிருக்கிறது
நீ தூவிச் சென்ற வார்த்தைகள்
சுற்றிக்கொள்ளப் பிரயத்தனப்படும் கொடியென
*****
--இளங்கோ (
கீற்றில் தேட...
ஒற்றைச் சொல்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்