*
இந்த அறையின் இருளுக்குள்
என் ஜன்னல் கடக்கும்
காலடிச் சத்தங்கள்
மூடிய அதன் கதவின் இடுக்கின் வழியே
மழை நீரைப் போல் வழிந்து
இறங்குகிறது
மெல்ல பரவி என் பாதங்களைத் தழுவி
காதுகளை எட்டும்போது
தெருவின் விசும்பல்
மனவெளியில்
நிம்மதியற்று அலைகிறது
அடித்து ஓய்ந்த பின்
காற்றில் மிச்சமிருக்கும்
ஆலய மணியின்
கடைசி ரீங்காரமாக
****
--இளங்கோ (
கீற்றில் தேட...
ஜன்னல் கடக்கும் காலடிச் சத்தங்கள்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்