எனது கழிவறையை
நானே கழுவுகிறேன்
அவ்வப்போது
உண்ணா நோன்பிருக்கிறேன்
உடல் மெலிவதற்கு
பருத்தி ஆடைகளை
தேடி அணிகிறேன்
வெய்யிலைத் தணிக்க
கழி ஒன்று வாங்கி
வைத்திருக்கிறேன் பாசத்தில்
வழுக்காமலிருக்க
உடம்பிலுள்ள உப்புக்கென
துள்ளல் நடையும் பயில்கிறேன்
எத்தனை முறை அடி விழுந்தாலும்
அனைத்தையும் வாங்கிக்கொண்டு
அமைதியாகத்தானிருக்கிறேன்
இனமே அழிக்கப்பட்ட போதும்
வன்முறை தீர்வாகாது
என்று கூறித்திரிகிறேன்
இப்போது
அரையினும் கூடுதல்
நிர்வாணம் காண்பித்து
சுதந்திரமும் வேண்டி நிற்கிறேன்
யார் சொன்னது
நான் காந்தியை
மறந்து விட்டேனென்று..?!
- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!
- காதல் தாண்டவம்
- சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா?
- பெரியார் முழக்கம் மே 09, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- இராமாயணம் தொடர் விதைத்த மதவெறி
- சமூகப் போராளிகளை இனம் காண்போம்... கொண்டாடுவோம்!
- மாசி வீதியின் கல் சந்துகள் - கவிதை நூல் விமர்சனம்
- மணாளனே மங்கையின் பாக்கியம் (புரூவச் சக்கரவர்த்தி கதை)
- நான்கு கணங்கள்
- ஊழலுக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது கொலை வெறித் தாக்குதல்
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்