இட்டிலியும் தோசையும்  தின்றுகொண்டிருக்கிறது
பசித்த புலி-
 
தாயைத் தின்ற சிங்கத்தை
போலீசில் பிடித்துக் கொடுக்கிறது 
குட்டி முயல்-
 
 காக்கையிடம் ப்ளீஸ் சொல்லி
வடை வாங்கித் தின்கிறது நரி
 
ஆமையின் முதுகிலேறி
வலம் வருகிறது போட்டிக்கு வந்த முயல்
 
ஆக்டோபசுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன
டாமும் ஜெர்ரியும்....
*********************************
கதை சொன்ன களைப்பில் 
தூங்க ஆரம்பிக்கிறது குழந்தை-
********************************
புதுக் கதைக்குள் 
புகுந்து கொள்ளும் தங்களின் முறைக்காக 
தலைமாட்டில் காத்திருக்க ஆரம்பிக்கின்றன
மற்ற விலங்குகளெல்லாம்!
Pin It