நிலவொழுகும் நள்ளிரவில்
கள்ளிச்செடி முட்களின்
குருதி வண்ணம்
மேனியெங்கும்
புள்ளிகளாய் வழிந்து கொண்டிருந்தன..
விவேகம் விலக்கப்பட்டு
வேகம் மட்டுமே உருவமாய்
தொடர்கிறது
கனத்துப் போன உயிரொன்றின் பயணம்..
அவ்வேகம்
இன்றுவரை துளியளவும்
எதிர்படாததாகவே
தெரிவதில்
வியப்பொன்றும் இருக்கவில்லை..
இதோ தென்பட்டு விட்டது
அதற்கான புற்று வளை..
பெருமூச்சுகள் தீர்ந்திட
சிறு துவாரம் வழி
நுழைந்தும் விட்டாகியது..
அடுத்த சில நொடிகளில்
கையில் கடப்பாரையுடன்
துரத்தியவன்
வெள்ளை நுரை
கக்கி கீழ் விழுந்தான்..
நீலம் பாய்ச்சி
நரகத்தின் விளிம்பில்
அவனை உட்புகுத்தி
அருகிருந்த புதருக்குள்
சற்றும் அரவமின்றி
மறைந்தது
மற்றுமொரு அரவம்..
- தேனப்பன் [