நமக்கிடையே
விழுந்த முடிச்சை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய்
உன் பற்களால்..
இறுக்கிக் கொண்டிருக்கிறேன்
என் சொற்களால்..
*******
வெளியிலிருந்து
எந்தக் குறுக்கீடுமில்லாத
நமது நேசத்திற்கு
குறுக்காய் நின்று கொண்டிருக்கிறது..
என் கடந்த காலம் பற்றிய ஏமாற்றங்களும்
உன் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளும்..
*******
உண்மையை
கற்பனை என்று சொல்லச் சொல்கிறாய்..
என் கற்பனை
உண்மையான பின்
*******
மங்கலாகிக் கொண்டிருந்த
எனது மொழியில்
வெளிச்சத்தைப் பரப்பியது
உன் நேசமே
*******
எந்த உத்திரவாதமுமின்றி
நகரும் என் பொழுதுகள்
எந்த உறுதியுமில்லாது
நீ சிந்தும் புன்னகை
எந்த நிர்பந்தமுமின்றி
பெருக்கெடுக்கும் நேசம்
ஏதோ ஒரு காரணத்தால்
மறைக்கப்படும் உண்மை
எதற்கும் துளியளவு கூட
சந்தேகமில்லை
நீயும் நானும்
கொண்டிருக்கும்
நம்பிக்கை பற்றி.
*******
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- விவரங்கள்
- இவள் பாரதி
- பிரிவு: கவிதைகள்
ivansatheesh.blogspot.com/
RSS feed for comments to this post