01
தூக்கி எறியுங்கள்
உங்கள் தம்புராக்களை
தூளியில் உறங்கும்
சிசுவின்
தூக்கம் கலையும் முன்.
o
02
பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு.
o
03
இங்கிருந்து
கொடுக்கப்பட்டவைகளே
எல்லாம் என்றிருக்க
எதைக் குறித்து
சொல்லிக் கொண்டலைகிறோம்
நான் நானென்று.
கீற்றில் தேட...
மிதந்தலையும் வெண்ணிறப் பறவை
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: கவிதைகள்