*
தோல்விகளின் வரலாற்றை
நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்
சமரசங்களின் மீது
நம்பிக்கையிழந்த அடையாளங்கள்
அதன் மேஜையில்..
நகக் கீறலின் வடுவைப் போல்
தங்கி விடுகிறது..
யாருமற்ற சபையின்
வனையப்பட்ட மௌனங்கள்..
சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன
யாவற்றையும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!
*****
- இளங்கோ (