நம்முடைய செல் சுவர்களில்
சோர்வும் சலிப்பும்
புகைச்சலும் புழுக்கமும்
துளைக்கிறது ஓர் எலியைப் போல்
பொறுப்புணர்வும் பகுப்புணர்வும்
பூட்டப்படுகிறது எதிர்கால விலங்கால்
நமக்கு.
நம் இருப்பும் செயலும் 'ஒரு மாதிரி'
அச்சில் வார்க்கப்பட்டு உருளும்
நினைவுகளாலும் சிந்தனைகளாலும்
பிதுங்குகிறோம் நமக்கு வெளியே
ஊட்டப்படுகின்ற
கற்பனைகளும் காட்சிகளும்
உணர்வுகளும் உணர்ச்சிகளும்
நம்முள் கூடும்.
காலமற்ற ஓர் அலகில்
உருக்கொள்கிறது பேரச்சம்
என்னுள்
அது வளர
நெட்டித் தள்ளுகிறது மூர்க்கத்துடன்
ஓர் போலீஸ்காரனைப்போல் என்னை
மறைவிடத்திற்கு...
- தங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!