எதற்கெடுத்தாலும்
நேரமில்லை என்கிறாய்
ஒருவேளை
மரணம் என்னை
அழைக்கும் போது
உன்னிடம் முன் அனுமதி
பெற வேண்டியிருக்கும் போலும்..
அடிக்கடி உன்னைப் பிடிக்குமென
சொல்வதில்
சலிப்பேற்படுவதில்லை
காதலில் குற்றமில்லை
கூறியது கூறல்
உன்னிடம்
ஊடல் கொள்ளும் போது
தோழியர்களிடம்
கொட்டித் தீர்த்து விடுகிறேன்
ஒரு போதும்
சொல்லியதில்லை
ஊடல் தீர்ந்து கூடியதை..
- இவள் பாரதி (