முன்னுரை
மாநுட தருமத்தின் தந்தை மநு! மநு உரைத்தது யாவும் வாழ்க்கைக்கு பிணியும் மருந்துமாகும். மநு ஒருவர் அல்லர். நால்வர் என்கின்றன ரிக் வேதமும் கீதையும், இந்து தருமங்களோ மநு எழுவர் என்கின்றன!
"மானவ" தருமமாக வகுக்கப்பட்ட போது மநுவின் தரும சூத்திரங்கள் ஒரு லட்சமாம். மநு தர்மம் சாத்திரமாக வடிவெடுத்த போது அது 2683ஆம் இந் நூலுள் அதனினும் சுருங்கி 1943 ஆயின.
சிந்து நதிக்கரை நாகரிகத்திலும் தொன்மை வாய்ந்த தர்மங்கள் இதனுள் பேசப்படுகின்றன. ஆரியம் பரவிய நாடுகளெங்கும் பரவியுள்ள தருமங்களில் உயிர்ப்புடன் இன்றும் உலா வந்து கொண்டிருப்பது இம்மநுதர்மமே.
பாரத பூமியின் நீதி நெறிகளில் வேரூன்றி நின்று நிலையான பெரும் பகுதியை ஆளுவதும் கோலோச்சுவதும் இத்தர்மமே என்பது அறிஞர்கள் துணிபு. பாரத நாட்டின் வழக்காறுகளை நிலைப்படுத்தி வருவது மநு என்பது மறக்க முடியாத உண்மை.
மநுதர்மத்தின் மற்றொரு மறுபதிப்பே இந்திய அரசியல் சட்டம்.
இமயம் முதல் குமரி வரை எங்கும் எதிலும் எப்போதும் யாவராலும் மநுதர்மத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டிப் பேசப்பட்டு அவை நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.
மநு உரைத்த தர்மங்கள் கல்வி அறிவு பெருகாத காலக் கட்டத்தில் எல்லோராலும் கற்கப் படாததற்குக் காரணமுண்டு.
கற்காமலேயே மக்கள் பின்பற்றி ஒழுகி வரும் தர்மநெறிகளை அவர்கள் கற்றுணர்ந்தால் என்ன? என்ற சிந்தனையே இந்நூலை நான் உருவாக்க ஊக்கியது.
மணிப் பிரவாளத் தமிழிலிருந்து மநு தர்மத்தை மீட்டு எளிய தமிழில் தந்திட எண்ணினேன். ஆனால் இயன்ற வரை தான் தமிழ்ப்படுத்த முடிந்தது. முழுவதும் தமிழ்???
பழகிப்போன பல பழக்க வழக்கங்கள்தான் இங்கே எழுதப் பட்டுள்ளன என்பதைக் காட்ட சில வடசொல் வடிவங்கள் வழக்கில் உள்ளபடியே இங்கு அப்படியே வழங்கப்பட்டுள்ளன.
இதனை ஏற்று அச்சியற்றி வெளியிட முன்வந்த குயில் பண்ணை உரிமையாளர் திருமதி அ. சரசு அவர்களுக்கு எனது இதயமுவந்த நன்றி.
இந்த நூலை எழுத்திற்கெழுத்து படித்து, என்னோடு விவாதித்துச் சூத்திரங்களை இன்னும் எளிமையாக்கி, இதை வெளியிடாதத் துணை செய்தவர் புலவர் திரு.பி. அண்ணாமலை அவர்கள். அண்ணார்க்கு எனது இதயம் உவந்த நன்றி.
- தமிழ் நாடன்
மநுதர்ம நூல் தோற்றம்
ஐம்பொறிகளின் உணர்வுகளுக்கு ஆட்படாமல் ஐந்தையும் அடக்கி, மனதை நன்னெறி நிறுத்தி, பரம்பொருளின் தன்மையை உணர்ந்து, எல்லையில்லாத வல்லமைகள் சேர்த்த, தானே தோன்றிய, மநுப் பிதாவைத் தவவலிவும் பேரநுபவங்களும் ஒருசேரப் பெற்ற தேவ முனிபுங்கவர்கள் தேடிச் சென்றடைந்து அவரடி பணிந்து இனிது நின்று:
நிமிர்ந்த ஞானமும், வலிவும் திறனும், புகழொளியும் பெற்று விளங்கும் பெரியோனே!
வேதங்கள் விதித்தபடியே வேள்வி நற்கருமங்கள் யாவும் நிகழுகின்றன. யாராலும் இயற்றப் பெறாத, தானே தோன்றியதும் தர்க்கவாத நீதிகளால் அறுதி செய்ய முடியாததும் ஆகிய வேதங்களை முற்றும் உணர்ந்த முதல்வோனே!
இவ்வுலகில் தோன்றி வாழும் நால்வருணத்து மக்களும் பிறவுயிர்களும். பிறவும் கடைப்பிடித்து ஒழுகத்தக்கதாக அவரவர்களுக்கு விதிக்கப் பட்டனவாகிய கடமைகளைக் காரிய காரணத் தொடர்போடு எமக்கு விளங்கும் படியாக விரித்துரைப்பீராக! என வேண்டினர்.
மநுப்பிதாவும் முனிபுங்கவர்களை அவரவர்களுக்கு உரிய முறைப்படி யாதும் குறை நேராதபடி தக்கவாறு உபசரித்து "நீங்கள் விரும்பியவாறே ஆகுக! என்று தனது தர்மங்களை விரித்துக் கூறத் தொடங்கினார்.
(தொடரும்)
- தமிழ் நாடன்
வானம்பாடிக் கவிஞர் சேலம் தமிழ்நாடன் மறைவு
புதுச்சேரி: சேலம் தமிழ்நாடன் நேற்று 09.11.2013 அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார்.
1941 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஒன்றாம் நாள் இருசாயி(எ) கமலபூபதி அம்மையாருக்கும் ஆறுமுகம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர் சேலம் தமிழ்நாடன். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தொடக்க, உயர்நிலைப் பள்ளி வகுப்புக் கல்வியைச் சேலத்தில் படித்தவர். 1959 இல் சேலம் கல்லூரியில் படித்தவர். 1962 இல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்.17.0 9. 1964 இல் ஆசிரியர் பணியில் இணைந்தார். இக்காலகட்டங்களி ல் கவிதை எழுதத் தொடங்கியவர். இதே காலகட்டத்தில் தமிழர் தந்தை ஆதித்தனார் தொடர்பு ஏற்பட்டது. 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1966 இல் எழுத்து சி.சு. செல்லப்பா அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. 1968 இல் கலைவாணி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். ஒரு மகனும்(மறைவு), ஒரு மகளும் மக்கட் செல்வங்களாக வாய்த்தனர். 1972 இல் புதுக்கவிதைக்கா ன வானம்பாடிக் கவிஞராக அறிமுகம் ஆனார். 1985 இல் சேலத்துச் செம்மல் விருது பெற்றவர். 1995 இல் திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது பெற்றவர். 30.06.1999 இல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். தமிழ்நாடன் அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தி ன் தமிழ் மொழி ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஓர் அறிஞர் - கலைஞர் - ஓவியர் - சிற்பக் கலைஞர் - தோல் சிற்பக் கலைஞர் - நாட்டார் சொல் கவிதை வழக்கு கலை இலக்கிய கர்த்தா - தமிழர் பண்பாட்டு நாகரிகத் தொன்மை விளக்கப் படைப்புகளை ஏராளமாக படைத்திருக்கிறா ர் - அல்லும் பகலும் ஆய்வுகளிலேயே நேரத்தை செலவிடுபவர் - சேலத்தின் தொன்மை சிறப்பை - அருங்காட்சியகத் தைவிட அதிகமான செய்திகளை நினைவில் நிறுத்தி பகிரக்கூடியவர். எழுபத்தியிரண்டா ம் அகவையில் இயற்கை எய்திய சேலம் தமிழ்நாடன் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி எழுத்தாளராக, ஓவியராக, கவிஞராகப் பன்முகத் தன்மையுடன் தமிழுலகில் அறியப்பட்டவர். தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர். கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர். பாவேந்தரின் குமரகுருபரர் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000). சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர். தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995). தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் சிறப்பு வெளியீடாக வந்து தமிழ்மக்களின் மதிப்பினைப் பெற்ற நூல். கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும ் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980). கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுநர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர். தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின ் முன்னவர். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர், பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர், புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர், கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர். செ.இராசுவுடன் இணைந்து பணியாற்றியவர், சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர், கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்
சேலம் தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்: தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010) வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் (பரமத்தி வேலூர்) (1995) பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு) சேலம் : கலையும் இலக்கியமும் (1995) சேலம் திருமணி முத்தாறு (2006, 2010) கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009) 2000 yeas of Salem (1976) The Story of India Indra 1975 அன்புள்ளம் அருணாசலம் 2005 சேலம் மையப்புள்ளி 2010 தொகுத்த நூல்கள் South Indian Studies (1981) சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988) தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996) தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996) தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996) கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008) அண்மையப் படைப்பு - "அல்குல்" - காவ்யா வெளியீடு - கரிசல் கதைசொல்லி கி.ராவின் முன்னுரையோடு அமைந்த நூல். அருமையான வெளிப்பாடு - இதன் பதிவுக்குச் சங்க இலக்கியம் - மேலை நாட்டு மொழி அறிஞர்களின் மனப்பதிவுகள் - எடுத்துக்காட்டு கள் - இடுகுறிகள் என ஒரு சங்க இலக்கிய திறனாய்வுக் கண்ணோட்ட்த்துடன ் எழுதி இருக்கிறார். செய்தி - முனைவர் மு. இளங்கோவன்
muelangovan.blogspot.in/
RSS feed for comments to this post