"உ.வே.சாமிநாதய்யர் மட்டும் இல்லை என்றால் தமிழ் இலக்கியங்கள் எதுவுமே நமக்குக் கிடைக்காமல் அழிந்து போயிருக்கும். ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியக் கருவூலங்களை எல்லாம், அவர் அச்சில் பதிப்பித்துக் கொடுத்ததால் தான், இன்று நம்மால் தமிழ் இலக்கிய நூல்களைப் படிக்க முடிகிறது; பாதுகாத்து வைக்க முடிகிறது." என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வேறுபாடு தெரியாத வகையில் பலரும் பேசுகின்றனர். அவ்வளவு பெரிய தொண்டு செய்தவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவது இல்லை என்று சிலர் கோபாவேசமாக உறுமவும் செய்கின்றனர்.
இவை எல்லாம் சரியா? நிச்சயமாக இல்லை. உ.வே.சாமிநாதய்யர் பிறப்பதற்கு முன்னாலேயே பல பழந்தமிழ் இலக்கியங்கள் பத்தகங்களாக அச்சு வடிவில் பதிப்பிக்கப்பட்டு விட்டன.
8.12.1822 அன்று பிறந்து 5.12.1879 அன்று மறைந்த, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் 1849ஆம் ஆண்டில், சென்னையில், சூளாமணி நிகண்டுரையை அச்சில் பதிப்பித்தார். (உ.வே.சா. 19.2.1855இல் தான் பிறந்தார்.) அதன் பின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படை, திருவாசகம், திருக்கோவையார், சிவஞான போதம், பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், வாக்குண்டாம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் புத்தக வடிவில் அச்சில் பதிப்பித்து இருக்கிறார். இவை யாவும் உ.வே.சா. அச்சுத் தொழிலைப் பற்றிச் சிந்திக்கும் முன்னரே பதிக்கப்பட்டவை.
12.9.1832 அன்று பிறந்து 1.1.1901 அன்று மறைந்த யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை, நீதிநெறி விளக்கம் எனும் நூலை 1859ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். மேலும் தொல்காப்பியம் பொருளகராதி, வீரசோழியம், இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட பத்து தமிழ் இலக்கிய நூல்களை அச்சில் பதிப்பித்தார். இவையும் சென்னையில் தான் பதிப்பிக்கப்பட்டன.
அதுவும் தொல்காப்பியப் பொருளகராதி நூலின் சுவடிகளைத் தொகுக்க அவர் மிகுந்த சிரமங்களைப் பட்டிருக்கிறார்.
18.1.1854 அன்று பிறந்து 23.3.1922 அன்று மறைந்த, இலங்கை, சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் 1886இல் தொடங்கி 1911 வரையில் யாப்பருங்கலக்காரிகை, ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, உள்ளிட்ட பதினான்கு நூல்களை அச்சில் பதிப்பித்து உள்ளார்.
இவர்களுள் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் பதிப்பித்த காலங்களில், சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சில் கொண்டு வரும் பணி ஒரு தொழிலாக / வணிகமாக வளர்ந்து இருக்கவில்லை. அவர்கள் இதை ஈக உணர்வு கொண்ட தொண்டாகவே செய்தனர்.
தமிழ் இலக்கியங்களை அச்சு வடிவில் கொண்டு வந்த பின் அப்பணி ஆதாயம் அளிக்கும் தொழிலாக / வணிகமாகப் பரிணமித்தது. இந்நிலையில் தான் உ.வே.சாமிநாதய்யர் அச்சுத் துறையில் புகுந்தார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டார். உண்மையே. அதற்கு ஈடான பொருளாயதப் பயனையும் அடைந்தார். பழந்தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளை அரும்பாடு பட்டுச் சேர்த்தார். அதற்கான கைம்மாறும் கிடைக்கவே செய்தது. அதாவது அவர் ஒரு வெற்றிகரமான பதிப்பு வணிகராக இருந்திருக்கிறார்.
ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தமிழ் இலக்கியங்களை அச்சில் பதிப்பித்தல் எனும் புத்தம் புதிய முயற்சியில் இறங்கி, எவ்விதக் கைம்மாறும் எதிர்பார்க்காமல் தொண்டு புரிந்தனர். இப்பணிக்கான பாதையை அமைத்தது மட்டும் அன்றி நன்றாகச் செப்பனிட்டு எளிமையாகவும் ஆக்கி வைத்தனர்.
ஆனால் நமது கல்வி முறையும், ஊடகங்களும், ஏதோ உ.வே.சாமிநாதய்யர் தான் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றித் தந்தவர் என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்து இருக்கின்றன.
உண்மையில் ஓலைச் சுவடியில் இருந்து, தமிழ் இலக்கியக் கருவூலங்களை, அச்சு வடிவில் கொண்டு வரும் பணியைத் தொடங்கி வைத்ததும், அதற்கான பாதையை அமைத்தது மட்டும் அன்றிச் செப்பனிட்டு எளிமையாக்கி வைத்ததும் ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரம் பிள்ளையுமே ஆவர். உ.வே.சாமிநாதய்யர் அந்த எளிமையாக்கப்பட்ட வழியில் சென்று பல நூல்களைப் பதிப்பித்தார். உ.வே.சா. அவ்வாறு செய்திராவிட்டால் வேறு யாராவது அதைச் செய்து இருப்பார்களே ஒழிய, அப்படியே அழிய விடப்பட்டு இருக்காது. ஏனெனில் அன்றைய தேவையும் (need) கேட்பும் (demand) அவ்வாறு உருவாகி இருந்தன.
ஆனால் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் இத்தொண்டைச் செய்திராவிட்டால், இன்று நமக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.
ஆகவே உ.வே.சாமிநாதய்யர் தான் தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றித் தந்தார் எனும் கருத்துருவம் ஒரு அப்பட்டமான மாயையே ஒழிய அதில் இம்மி அளவும் உண்மை இல்லை. பார்ப்பனர்கள் ஒரு சிறிய செயலைச் செய்தாலும் ஆகா! ஓகோ! என்று புகழ்வதும், மற்றவர்கள் அரிய பெரிய செயல்களைச் செய்தாலும் அவற்றை மறைப்பதும், மறைக்கவியலா இடங்களில் சிறுமைப்படுத்துவதும் பார்ப்பனர்களின் பொதுநிலையே.
மேலும், செய்த தொண்டின் அளவிற்குப் பெயரும் புகழும் அவருக்குக் கிடைப்பது இல்லை என்று இம்மி அளவும் நாணம் இன்றிப் பரப்புரை செய்கிறார்கள். ஆனால் அவர் செய்த பணிக்கு அதிக பட்சமாக எவ்வளவு பெயரும் புகழும் அடையலாமோ அதைவிடப் பல நூறு மடங்குகள் அடைந்து இருக்கிறார். உண்மையில் ஆறுமுக நாவரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் அவர்களுக்கு உரிய புகழில் இம்மி அளவும் பெறவில்லை என்பது மட்டும் அல்ல; அடியோடு மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
- இராமியா
ஸ்ரீரசா அவர்களே! ஆறுமுக நாவலரும், சி,வை,தாமோதரம் பிள்ளையும் செய்த பதிப்புத் தொண்டுக்கு உ.வே.சா.வின் தொண்டும் நிகரானது என்ற கூற்றில் ஆறுமுக நாவலரும், சி,வை,தாமோதரம் பிள்ளையும் தான் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பதில் முனனோடிகள் என்ற கருத்து காணக் கிடக்கிறது. அப்படி இருக்க, பாடப் புத்தகங்களிலும் , பெரும் ஊடகங்களிலும் இருவருடைய பெயர்களை இத்துறையின் முன்னோடிகள் என்று ஏன் காட்டப்படுவது இல்லை? இந்த உண்மையை எடுத்துக் காட்டினால் அதற்குப் பெயர் காழ்ப்புணர்ச்சியா?
உ.வே.சா.வின் சுய சரிதையைப் படித்துப் பாருங்கள். அவர் பதிப்பு வேலை செய்வதற்கு உரிய கைம்மாறு பெற்றாரா அல்லது ஈக உணர்வுடன் தான் செய்தாரா என்பது புரியும். என்னுடைய கட்டுரையைச் சிறு பிள்ளைத்தனம் என்று கூறுவதன் மூலம் நீங்கள் சிறு பிள்ளை என்று காட்டிக் கொள்கிறீர்கள்.
இதற்கெல்லாம் பொருளாதாரத் தரவுகளைக் கேட்கும் நண்பரே! தகுதியும் திறமையும் அனைத்து வகுப்பு மக்களிடமும் இருக்கையில் அதிகார மையங்களில் மிகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே தேர்ந்து எடுக்கப்படுவதன் காரணத்தை என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? அதைத் தடுத்து, அனைத்து வகுப்பு மக்களிடமும் தகுதியும் திறமையும் இருக்கையில், அனைத்து வகுப்பு மக்களும் மக்கள் தொகையில் அவரவர் விகித்திற்கு ஏற்ப அதிகார மையங்களில் இடம் பெறுவதற்கான வழி வகைகளைப் பற்றி யோசித்து இருக்கிறீர்களா?
நான் உண்மையில் தொண்டு செய்தவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறேன். வணிகம் செய்தவரை ஈகம் செய்தவர் எனத் தவறாகப் புனைந்து காட்டுவதையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். இதில் நான் யாரையும் உயர்த்திக் காட்டவும் இல்லை; தாழ்த்திக் காட்டவும் இல்லை. ஆகவே இது நிச்சயமாகப் பார்ப்பனக் கருத்தியல் அல்ல.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனய ந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி , சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிர ோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப ்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தி ல் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதிய ாக இருந்தார். சாதிப்பிரசாரங்க ளை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார் . "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள் ளார்" அவருக்குச் சைவ சமயம் சார்ந்த நூல்களைப் பதிப்பித்து சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய்வதே வாழ்நாள் பணி.. அதற்கேற்ற வகையில் அந்த நோக்கங்களுக்கான பதிப்புப் பணியைச் செய்தார்.. தமிழ் மற்றும் தமிழருக்கான பொது நோக்கம் கருதியல்ல.. என்றாலும் பதிப்பின் வரலாற்றில் முன்னோடியாக என்ன நோக்கத்திற்காகவ ேனும் அவர் நின்று நிலைக்கிறார்.. அதுபோலவே சி.வை.தாமோதரம் பிள்ளையின் பொருளாதார பலமும் வலுவானதே... ஆனால் பொருளாதார நிலை வலுவாக இருந்தோரெல்லாம் தமிழ்ப்பணியாற்ற வில்லை என்பதையும் சேர்த்தே நோக்க வேண்டும்.. ஆனால் அதற்காக உ.வே.சா.வை வெறும் வணிகத்துக்காகப் பதிப்பித்தான் என்று தாங்கள் கூறுவது நிச்சயம் சிறுபிள்ளைத்தனம ன்றி வேறென்ன? சீவக சிந்தாமணி போன்ற சமண இலக்கியங்களையும ் தேடிப் பதிப்பித்த ஒருவரை இத்தகைய அற்ப அளவீடுகளைக் கொண்டு மதிப்பிடுவது எந்த வகையான நியாயம்? தலைப்பிலேயே ஒரு தாழ்த்துதலைச் செய்துவிட்டு.. தாழ்த்திக் காட்டவில்லை என்று வெட்டி நியாயம் பேசுவது முறையா?
ஆறுமுக நாவலரும் சி.வை. தாமோதரம் பிள்ளையும் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பதன் மூலம் என்ன பொருளாயதப் பயனை அடைந்தார்கள்? உ.வே.சா. தன் பொருட்களை ஈகம் செய்தா தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார்? பதிப்புத் துறையில் இவர்களுடைய பணியில் வேறுபாடு இல்லையா?
தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தது பற்றிய வரலாற்றில் உ.வே.சா. மட்டும் தான் முழுக்க முழுக்க இடம் பெற்று இருக்கிறாரே? இது தவறு இல்லையா? இது தவறு என்பதை மக்களுக்கு எப்படிப் புரிய வைப்பீர்கள்?
ஆறுமுக நாவலரின் வருண அதர்ம சார்பை ஆதரித்து இங்கு எதுவும் எழுதப்படவில்லை. அப்படி வருண அதர்மத்தை ஆதரித்தாலும், அவர் பார்ப்பனர் அல்ல என்ற ஒரு காரணத்தாலேயே அவரை இருட்டடிப்பு செய்யும் பார்ப்பன மன நிலை தான் இங்கு எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது.
உ.வே.சா. பதிப்புப் பணியைச் செய்யவே இல்லை என்று சொல்லப்படவே இல்லை. அவர் தான் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து அழிவில் இருந்து காப்பாற்றினார் என்ற பொய்யுரை தான் மறுக்கப்பட்டு உள்ளது. இப்பணியை உ.வே.சா. செய்திரா விட்டால் வேறு யாராவது செய்து இருப்பார்கள். ஏனெனில் அத்தகைய தேவையையும் (need) கேட்பையும் (demand) ஆறுமுக நாவலரின், சி.வை.தாமோதரம் பிள்ளையின் பணிகள் உருவாக்கி இருந்தன.
யும்...
ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தது ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்று தான் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகி றதே ஒழிய அதன் பின்னால் அதை மேம்படுத்தியவர் களைக் குறிப்பிடுவது இல்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தை அச்சில் பதிப்பித்து அழிவில் இருந்து காத்தவர் உ.வே.சாமிநாதையர ் என்று தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள ே ஒழிய ஆறுமுக நாவலரைப் பற்றியும் சி.வை.தாமோதரம் பிள்ளையைப் பற்றியும் குறிப்பிடுவதே இல்லை. இது தவறு என்று தோன்றவில்லையா?
ஆகாய விமானத்தைப் பொறுத்த மட்டில் அதை மேம்படுத்தியவர் களைப் பற்றியும் கண்டு பிடித்தவர்கள் (inventors) பட்டியலில் குறிப்பிடுவது இல்லை. ஆனால் தமிழ் இலக்கியங்களைக் காத்தவர் என்ற பொய்யான பெருமை உ.வே.சா.விற்கு அளிக்கப்படுகிறத ு. அதிலும் அவர் தமிழ் இலக்கியங்களை அச்சில் கொண்டு வருவதில் எந்த மேம்பாடும் செய்யவில்லை. மேலும் அவருடைய பணியில் ஈகம் எதுவும் இல்லை. அவர் தம் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தார். அதை மறுக்கவில்லை. ஆனால் அவர் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றினார் எனும் பரப்புரை பொய் என்று தான் தெளிவாக்கப்படுகிறது.
உ.வே.சா. அச்சுப் பதிப்புத் தொழிலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார் என்று கூறுங்கள். ஆனால், அவர் தான் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காத்தார் என்று கூற வேண்டாம்.
நன்றி.
இக்கட்டுரையில் உ.வே.சாமிநாதய்ய ர் பதிப்புத் தொழிலைப் பற்றி நினைப்பதற்கு முன்னாலேயே தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிற்குக் கொண்டு வரும் பணி தொடங்கி விட்டது என்பது எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. ஆகவே உ.வே.சாமிநாதய்ய ர் தான் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றினார் என்று நிலவும் கருத்து, பொய் என்று கூறப்பட்டு உள்ளது. இதில் தரம் தாழ்ந்த விமர்சனம் எங்கே இருக்கிறது?
சரி! இது வரையில் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த முன்னோடிகள் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் என்பது தெரியாமல் இருந்தவர்கள், இனி மேலாவது இப்போதைக்கு நிலவும் பொய்க் கருத்தை மாற்றி (தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்துகாப்பாற் றியவர்கள் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் என்ற) உண்மையை உலகிற்கு உணர்த்த முன் வருவார்களா?
பார்ப்பனர்கள் கடந்த 100 வருடங்களாக இங்கு சந்தித்து வரும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றில் ஒன்றுதான் இம்மாதிரி தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.
பார்ப்பனர்கள் 100 வருடங்களாக இங்கு துன்பத்தைச் சந்தித்து வருகிறார்களா? உங்களுடைய கொடூரமான நகைச்சுவைக்கு அளவே இல்லையா? இக்கட்டுரையில் தரம் தாழ்ந்த விமர்சனம் உள்ளது என்பது எப்படி முழுக்க முழுக்கப் பொய்யோ அதே போல் பார்ப்பனர்கள் துன்பத்தைச் சந்திக்கிறார்கள ் என்பதும் கலப்படம் அற்ற பச்சைப் பொய்.
ஏழ்மையிலிருந்தா லும்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட வகுப்பு மக்களின் ஏழ்மையைப் பற்றி எப்படி உணரவே முடியாமல் இருக்க முடிகிறது? அவர்களின் ஏழ்மையை மிகத் தொலைவில் இருந்து பார்த்தாலேயே பார்ப்பனர்களில் உள்ள கடை நிலை ஏழைகள் என்பவர்கள் கூட மிக மிக வசதி வாய்ந்தவர்கள் என்று கூற முடியுமே. மேலும் அவர்களுக்குச் சமூகத்தில் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு (எவ்வளவு தகுதி படைத்து இருந்தாலும்) எட்டவே எட்டாது என்பதை நீங்கள் அறியவே மாட்டீர்களா?
கல்வி சாதியைக்காட்டி மறுக்கப் படுதல்
சாதியைக் காட்டி கல்வி மறுக்கப்படுவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட மக்களுக்குத் தான். பார்ப்பனர்களுக் கு அல்ல. கல்வி கற்றவர்களின் விகிதாச்சாரம், கல்வி கற்பவர்களின் விகிதாச்சாரம் ஆகியவற்றைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியுமே.
, வேலை மறுக்கப் படுதல்,
சாதியைக் காட்டி வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட மக்களுக்குத் தான். பார்ப்பனர்களுக் கு அல்ல. அதிகாரம், பணம், உடல் உழைப்பு தேவைப்படாத தொழில்களில்
பார்ப்பனர்களின், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் விகிதாச்சாரத்தை ப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியுமே.
ஊடகங்களின் கேலியும், கிண்டலும்,
உங்களுடைய கொடூரமான நகைச்சுவைக்கு அளவே இல்லையா? ஊடகங்களில் பார்ப்பன ஆதிக்கக் கருத்துகள் தான் பரப்பப்படுகின்ற ன என்பதை எப்படி மறைக்கலாம் என்ற தோன்றுகிறது? முழுப் பூசணிக்காயை ஒரே பருக்கைச் சோற்றில் மறைப்பது போன்ற பொய் என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா?
சமூகப் பாதுகாப்பின்மை,
பார்ப்பனர்களுக் கு, சமூகப் பாதுகாப்பின்மைய ா? மிக மிக ......... மிகக் கொடூரமான நகைச்சுவை.
பார்ப்பனப் பெண்களை தரம் தாழ்ந்து கேலி செய்தல் என பற்பல இன்னல்களை சந்தித்து வருகிறது பார்ப்பனர் சமூகம்.
பார்ப்பனப் பெண்கள் மட்டும் தான தரம் தாழ்ந்த கேலிக்கு உள்ளாகிறார்களா? பெண்கள் மீதான அடக்குமுறை என்பது வேறு விஷயம். சாதி அடிப்படையில் பெண்கள் பாதிக்கப்படுகிற ார்கள் என்றால், அது தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெணகள் தான். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எண்ணிப் பாருங்கள். கொடூரமான நகைச்சுவையைத் தயவு செய்து நிறுத்துங்கள்.
சாதி வேற்றுமைகளைக் களைய முன் நின்றது பார்ப்பனர்களே.
இந்த உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரைக்கும், பார்ப்பனர்களில் சாதிக் கொடுமைகளை / வருணாசிரமக்
கொடுமைகளை உண்மையாக ஒழிப்பதற்கான தீர்வைப் பற்றிச் சிந்தித்த ஒரு பார்ப்பனரைக் கூறுங்களேன்.
தற்போது ஹரிஜனங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்குக ் காரணம் யார் என தங்களால் வாய் திறந்து கூற முடியுமா?
நிச்சயமாகப் பார்ப்பன ஆதிக்கக் கருத்தியல் தான் இதற்குக் காரணம். பிற்படுத்தப்பட் ட வகுப்பு மக்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களும் தங்களுக்கு உரிய பங்கைப் பெற முடியாத நிலையில் தான் இது போன்ற மோதல்கள் ஏற்படுகின்றன. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கச் சிறிதும் தகுதி இல்லாத பொதுப் போட்டி முறையை முற்றாக ஒழித்து விட்டு, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அகியவற்றில் அனைத்து நிலைகளிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட் ட வகுப்பு மக்கள், முற்பட்ட வகுப்பு மக்கள், மதசிறுபான்மையின ர் ஆகியோருக்கு அவரவர்கள் மக்கள் தொகை விகிதத்தில் வாய்ப்புகளைப் பங்கீடு செய்து அளித்தால் இம்மோதல்கள் முற்றாக ஒழிந்து விடும் தயவு செய்து கீழ் கண்ட இணைப்பில் தரப்பட்டு உள்ள கட்டுரையைப் படித்துப் பார்க்கவும்.
keetru.com/.../...
சம்பந்தமே இல்லாமல் எதற்கெடுத்தாலும ் பார்ப்பனர்களைத் திட்டுவது, கையாலாகாதவர்களி ன் தாழ்வு மனப்பான்மையாகும ்.
நாங்கள் எதையுமே தொடர்பு இல்லாமல் பேசவில்லை; திட்டுவதும் இல்லை. உண்மையயைக் கூறுவது என்பது திட்டுவது ஆகாது. மேற்கண்ட இணைப்பில் தரப்பட்ட கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கையாலாகாதவர்கள் அல்ல; அவர்களிடம் திறமை பொதிந்து இருக்கிறது என்று தெரியும். திறமை பொதிந்தவர்களுக ்கு வாய்ப்பு கிடைத்து விடக் கூடாது என்று துடியாய்த் துடிக்கும் உயர்சாதிக் கும்பலினருக்குத ் தான் தாழ்வு மனப்பான்மையே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்ளுக்கு அல்ல என்பதும் புரியும்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுற்றியுள்ள மாயவலை அறுந்து தமிழர்கள் விசாலமான உலகப் பார்வையடைய வாழ்த்துக்கள்
கடந்த 50 ஆண்டுகளாக அல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தை அல்ல இந்தியா முழுமையையும், சுற்றியுள்ள மட்டும் அல்ல, இறுகப் பிணைத்தும் உள்ள மாய வலை அறுத்து எறியப்பட வேண்டும். அதற்குச் சரியான வழி இப்பொழுது திறமை இல்லாத பார்ப்பனர்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதும், திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைக்குச் செல்வதற்கு முட்டுக் கட்டை போடுவதுமான பொதுப் போட்டி முறையை ஒழித்துக்கட்டி விட்டு, விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை அமல்படுத்துவதே ஆகும். விசாலமான பார்வை என்ற பெயரில் வருணாசிரமக் கொடுமைகள் தொடருவதற்கு வாழ்த்துவதை விட்டு விட்டு, திறமை உடையவர்கள் உயர்நிலையை அடைவதற்கும், திறமைக் குறைவானவர்கள் அடுத்து நிலை வேலைகளைப் பார்ப்பதற்கும் வழி செய்யும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை அமல்படுத்த முன் வாருங்கள்.
RSS feed for comments to this post