பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்;

தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு மின்தடையா?

                                             மார்ச் 5 இல் மின்வாரியங்கள் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழு கூட்டம் பிப். 26, 27 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்றது. முதல் நாள் அண்ணாமலை ஓட்டல் அரங்கிலும், இரண்டாம் நாள் திவ்யோதயா அரங் கிலும் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் களும் கழகத் தோழர்களும் பார்வையாளர்களாக பங்கேற்றனர். கழகத்தின் செயல்பாடுகள், திட்டங் கள் குறித்தும் தங்கள் கருத்துகளை மாவட்டக் கழகங் கள் சார்பாக தோழர்களுடன் கலந்து விவாதித்து மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் அறிக்கைகளாக தயாரித்து வந்தனர்.   அதனடிப் படையில் விவாதங் களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. கூட்டத்தில்  இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அ)    தமிழ்நாட்டில் சில நாட்களில் மேனிலைப் பள்ளி களில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும், கல்லூரித் தேர்வுகளும் நடக்க இருக்கின்றன. இந் நிலையில் தமிழ்நாட்டில் வழக்கமான இரண்டு மணி நேர பகல் மின்வெட்டுக்குப் பதிலாக மூன்று மணி நேரமும், அதற்கு அதிகமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலோ முன் அறிவிப் பின்றி மின்வெட்டு அன்றாடம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து படிக்கும் முதல் தலைமுறை யினருக்கும், பேரூர்களிலும், நகரங்களிலும் வசிக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கும் மின்தடைகளின்போது வெளிச்சத்துக்கு மாற்று மின்சாரத்தை ஆக்கும் சாதனங் கள் எதுவும் இருக்காது என்பது வெளிப்படையான உண்மை. 

ஆனால், இந்நாட்டு வெகு மக்களுக்கு வேலை வாய்ப்பு எதையும் தராத பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், வெளியிலும் தொழி லாளர்களுக்கான இந்நாட்டின் பாதுகாப்பு சட்டங்கள் எதையும் பின்பற்ற வேண்டியதில்லை என்ற விதிவிலக் கோடும், தடையில்லா மின்சாரத்தை எப்போதும் குறிப்பிட்ட குறைந்த விலையிலேயே கொடுக்கப்படும் என்ற ஒப்பந்தத் திலும், மக்கள் நலனில் அக்கறையில்லாத ஊழல் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டு வருவது பேரவலமாகும். 

எனவே, இந்நாட்டின் பெரும்பான்மையாகவும், தங்களது கடும் உழைப்பால் அனைத்து வளங்களையும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளை களின் கல்வித் தேர்வுகளுக்கு பெரும் இடையூறாக உள்ள மின்வெட்டை 2011, மே மாத இறுதி வரையிலாவது அறவே ரத்து செய்து முழு நாளும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வாய்ப்புள்ள இடங்களில் மின்சார அலுவலகங்களுக்கு முன்னர் வருகிற மார்ச் 5 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று செயற்குழு தீர்மானிக்கிறது. 

வீடுகளுக்கான மின்சாரத்தை முழுமையாக வழங்குகிறோம் என்ற காரணம் காட்டி, விவசாயத்துக்கோ, சிறு தொழில்களுக்கோ கொடுக்கப்படும் மின்சாரத்தை நிறுத்தவோ, நேரத்தை குறைக்கவோ கூடாது என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது. 

இக்கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தேர்வை எதிர் கொண்டிருக்கிற மாணவர்களைத் தவிர பிற மாணவர்களும், பெற்றோர்களும், வெகுமக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது. 

ஆ)    பொது இடங்களில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை இருந்தாலும், மதப் பண்டிகைகள் மத விழாக்களில் இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் மாணவர்கள் தேர்வு காலங்களில் படிப்பதற்கு பெரும் இடையூறாகி விடுகிறது. நீதிமன்ற ஆணைகளுக்கு எதிரான இந்த சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. (இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நகல்களை காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது) 

மாநில செயற்குழுவில் உரையாற்றிய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் : வெள்ளமடை நாகராசு (கோவை வடக்கு), கா.சு.நாகராசு (கோவை தெற்கு), வழக்கறிஞர் சாஜித் (கோவை மாநகரம்), இலக்குமணன் (பெரம்பலூர்), தமிழ்ப்பித்தன் (பெரம்பலூர்), துரை. சம்பத் (திண்டுக்கல்), அழகிரி (கடலூர்), இராம. இளங்கோவன் (ஈரோடு), டேவிட் (சேலம்), குமாரதேவன் (வடசென்னை), அன்பு. தனசேகர் (தென்சென்னை), திலீபன் (வேலூர்), அய்யனார் (விழுப்புரம்), சாமிநாதன் (நாமக்கல்), தனபால் (கரூர்), வேடியப்பன் (தருமபுரி), ரசீத்கான் (நாகை), துரைசாமி (திருப்பூர்), சோலை மாரியப்பன் (தஞ்சை), பகுத்தறிவாளன் (அரியலூர்), பால். பிரபாகரன் (தூத்துக்குடி).  பார்வையாளர் களாக பங்கேற்ற கழகத்தினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். மாநகர பொறுப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

கோவை மாநகர கழகம் 2 நாள் கழக  செயற்குழுவுக்கும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Pin It