கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
சமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2007
- விவரங்கள்
- எஸ்.தேன்மொழி
- பிரிவு: சமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2007
எஸ். தேன்மொழி கவிதைகள்
மழைக்காள மௌனத்தில்
மழைக்கான அறிகுறியோடும்
மழையோடும் அந்த சிறுமி
பிரசவிக்கிறாள் என்னிலிருந்து
தனித்துவமான சோகத்தைச் சுமந்து
தனியாய் என்னை அடைகாக்கிறாள்
மழையின் இழைகளில் முகாரி
பாடுகிறாள் ஆத்மாவின் ராகமாய்
எனக்கான அந்த நேர சங்கீதம்
அவளிமிருந்து கடன் வாங்கப்பட்டவை
மழைபட்டவுடன் மறைந்து விடும்
வானவில்லைப் போல
மழை விட்டவுடன் என்னை விட்டு
அவள் கடந்து போக நேரிடுகிறது
என்னைக் கடந்து போக
மறுக்கிறதந்த மேகம்
பேதமற்று நீளும் என் கைகளால்
தொட்டு விட முயல்கிறேன்.
கடந்து போக மறந்து
இடைவெளி சுருங்கி
திரண்டு மதர்த்த மேகம்
தெருவாசியின் பாடல் போல
இருப்பை விரயம் செய்ய
நீராகி போய்விட்டேன் நான்
வெளியாகி போயிருக்குமோ
அந்த மேகம்