உலகில் ஒரே இந்து நாடான நேபாளம் மாவோயிஸ்டுகளின் புரட்சியால் கவிழ்ந்து போனது. இந்து ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்து விட்டார்களே! உருப்படியான வளர்ச்சிப் பாதைக்கு, மதச் சார்பற்றபாட்டைக்கு நாட்டை அழைத்துச் செல்லுவார்கள் என்று பார்த்தால், இந்து மதத்தின் வாடகை மனிதர்களாகத் தான் அவர்களும் இருக்கிறார்கள். இப்போது அங்கே மதமாற்றத்தைத் தடை செய்வதற்கும், பசுக்களைக் கொல்வது குற்றம் என்று சொல்வதற்கும் நேபாள பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மசோதா சட்டமாவதைத் தடுக்க அந்நாட்டு கிறிஸ்தவர்களும், மதசார்பற்ற அமைப்பினரும் முயன்று வருகின்றனர்.
ஜூன் 23ம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மத சார்பற்ற அமைப்பினரும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களும் இதை எதிர்த்தனர். இந்த மசோதா சட்டமானால், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் தங்கள் மதங்கள் பற்றி பேசுவதும், மதம் குறித்த அச்சுப்பதிப்புக்களை வழங்குவதும் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 700 டாலர் அபராதமும் வழங்கப்படும்.
இந்த மசோதாவுக்கு பதிலாக, சிறுபான்மையினருக்கென தனியொரு துறை நேபாள அரசில் அமைக்கப்பட வேண்டுமென்று கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், புத்த மதத்தினர் அனைவரும் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2001-2006) இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது - பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் கூட, இச்சட்டம் வெற்றி பெற முடியவில்லை என்பதால் இந்துத்துவாக்களே இக்கோரிக்கையை என்றாவது ஒருநாள் உச்சரிக்கும் 'ஸ்லோகமாக' மாறிவிட்ட நிலையில், சின்ன நாடான அதுவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆட்சி நடை பெற்று வரும் நாடான நேபாளத்தில், அதுவும் மதசார்பற்ற கொள்கை என்று கூறப்படும் கம்யூசத்தின் மறுபதிப்பான மாவோயிஸ்டுகள் ஆட்சியில் மனுநீதி சட் டமா? என்று சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள். நேபாள ஆட்சியர் இந்த விஷப் பரிட்சையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக வைக்கிறார்கள். அவர்களை நேபாளம் கவனிக்குமா?
சிறுபான்மை இனமக்கள் தங்களை பெரும்பான்மையாக மாற்றும் முயற்சிகளை பிறப்புரிமையாக கருதும் அதே வேளையில் பெரும்பான்மை மக்கள் தங்களை தற்காத்துக்கொள் ள முயற்சிகள் எடுத்தால் கூட அது மனித சமூகத்தின் மீது சுமத்தப்படும் அடக்குமுறையாக சித்தரிக்கப்படு கிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தேசத்தில் பசுவதை சட்டம் கொண்டுவருவது எந்த வகையில் நீங்கள் அநியாயம் என்று கருதுகிறீர்கள்? இன்றும் வீதி வீதியாக சென்று மத வியாபாரம் செய்யாதவர்கள் இந்துக்களே... பாகிஸ்தானில் சென்று பசுவதை சட்டம் கொண்டுவர போராடினால் அதை விமர்சிப்பது முறை... அனால் நேபாளத்தில் அல்ல... மதத்தை பின்பற்ற விதிக்கும் தடைக்கும் அதை பரப்புரை செய்ய விதிக்கும் தடைக்கும் மிகவும் வேறுபாடு உள்ளது... முன்னது அடிப்படை உரிமை பின்னது அப்படி அல்ல... வீணாக மக்களை உணர்ச்சிவசப்படு த்தும் விவாதங்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும்.
நேபாளத்தில் ஏற்பட்ட புரட்சி மக்களால் மக்களுக்காக ஊழலையும் , அடக்குமுறையையும ் எதிர்த்து நடந்த புரட்சி. தங்கள் கலாசாரத்தை எதிர்த்து அல்ல... புரட்சி செய்தவர்கள் மக்களே... தங்களுக்கு எது தேவை என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். எந்த போலி நடுநிலைவாதிகளும ் அவர்களுக்கு தேவை இல்லை...
திரு.பிரதீப்மகுமார் இந்து மதத்தையும் மற்ற மதங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கிறார். இந்து மதத்தில் பிறவி அடிப்படையில் வேறுபாடு கற்பிக்கும் சாதிப் பிரிவினைகள் இருக்கின்றன. இப்படிக் கூறிய உடனேயே மற்ற மதங்களில் பிரிவினைகள் இல்லையா என்று எகிறிக் கொண்டு எதிர் வினாக்களைத் தொடுப்பார்கள். ஆனால் மற்ற மதங்களில் உள்ள பிரிவினைகளுக்கு ம் இந்து மதத்தில் உள்ள சாதிப் பிரிவினைகளுக்கு ம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடுகள் உண்டு.
முதலில் மற்ற மதங்களில் ஒருவர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவிற்கு மாற முடியும். மேலும் அப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் கீழ் நிலையில் இருந்து மேல் நிலை வரைக்கும் வேலை செய்பவர்கள் இருப்பார்கள். ஆனால் இந்து மதத்தில் ஒரு சாதியில் பிறந்தவர் வேறு சாதிக்கு மாற முடியாது. அதை விடக் கொடுமையான அம்சம் என்னவென்றால் இந்து மதத்தில் பார்ப்பனராகப் பிறந்த ஒருவர் திறமைக் குறைவானவராக இருந்தாலும் அவரை உயர்நிலையில் வைத்துப் போற்றியே தீர வேண்டிய தலைவிதி சூத்திர சாதியில் பிறந்தவர்களுக்க ு உண்டு. பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, மிகுந்த உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளைச் செய்ய மாட்டார்கள். பார்ப்பனர்களாகப ் பிறந்து விட்ட காரணத்தினாலேயே அவர்களுக்கு எப்படியும் சொகுசான வேலை கிடைத்து விடும். சூத்திரர்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்கள் கீழ் நிலைகளில் தான் அதுவும் திறமைக் குறைவான பார்ப்பனர்களுக் குக் கீழ் தான் வேலை செய்ய வேண்டும். இந்நிலையை மாற்ற பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலைமையில் இந்து மதத்தில் அங்கம் வகிக்கும் மிக மிக .....மிகப் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ள சூத்திர்கள் இந்து மதம் அழியாமல் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினப்பவர்கள் பெரும்பாலான இந்து மக்களை அடிமைப்படுத்த விரும்பும் சிறு எண்ணிக்கையிலான பார்ப்பனர்களே.
பார்ப்பனர்களே! நீங்கள் உண்மையிலேயே இந்து மதத்தைக் காக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு மதமாற்றத் தடைச் சட்டங்கள் வழியே அல்ல. திறமையற்ற பார்ப்பனர்களை உயர்நிலைகளில் வைத்துக் கொள்ளும் வழிமுறைகளை முற்றாக அழித்து ஒழியுங்கள்.அவர் கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்துங்கள் . அப்படிச் செய்ய மாட்டோம் என்று அடம் பிடித்தால் அவர்களைக் கடுமையாகத் தண்டியுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது காலியாகும் உயர்நிலை வேலைகளுக்குச் சூத்திரர்களில் உள்ள திறமைசாலிகளைக் கொண்டு சென்று பயிற்சி அளியுங்கள். அப்படிச் செய்தால், மற்ற மதங்களில் உள்ள மக்கள் எப்படி மத உணர்வுடன் இருக்கிறார்களோ அது போல் இந்து மதத்தில் உள்ளவர்களும் மத உணர்வுடன் இருப்பார்கள்.
அப்படிச் செய்யாத வரையில் மற்ற மதங்களுடன் இந்து மதத்தை ஒப்பிட்டுக் கொள்ள முடியாது.
RSS feed for comments to this post