கனிமொழி கைது என்பது, கருணாநிதிக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததா இல்லையா என்பது செய்தியல்ல. ஆனால் அந்த கைதை செயல்படுத்த, நடந்த பின் சதிகள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பதே செய்தி. அதை இந்திய ஊடகங்கள் வெளியிட தகுதி இருக்கிறதா என்பது அதைவிடப் பெரிய செய்தி. நடந்த ஸ்பெக்ட்ரம் கதை ஒரு கார்பரேட் மோதல்.

அதவாது மக்களது வரிப்பணத்தையும், சந்தையையும் வளைத்துப் போட்டு, அதில் சிக்கிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வைத்து, சி.பி.ஐ. மூலம், காய்களை நகர்த்தி, ஒரு செஸ் விளையாட்டு இங்கே நடைபெற்று வருகிறது.

திடீர் பணக்காரனாக ஆக வேண்டும் என்று எண்ணிய, முரசொலி மாறன் வாரிசுகள் கலாநிதியும், தயாநிதியும், மத்திய அமைச்சரவையில் புகுந்து என்ன செய்ய லாம் என்று சிந்திக்கும் காலம் அது.

தயாநிதி மாறன், தோஹா உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டுக்கு சென்று, இந்திய வணிக அமைச்சர் என்ற கோதாவில், கையெழுத் திட்டு, அந்நிய ஏகபோக நிறுவ னங்களை தாராளமயமாக்கல் மூலம் இந்த நாட்டிற்குள், கண்டபடி இறக்க ஏற்பாடு செய்தார். அதை நன்கு கவனித்த வாரிசு மாறன்கள் அதன் பலனை பற்றிக் கொள்ள திட்டமிட்டார்கள். அதற்காக மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் துடித்தார்கள்.

முரசொலி மாறனின் மறைவுக்காக காத்திருந்த கருணாநிதி, உடன டியாக பி.ஜே.பி. கட்சி உறவை தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரசுடன் கை சேர்த்தார். இதற்கான ஏற்பாட்டையும் கார்பரேட்கள் கற்றுக் கொடுக்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்பில் இருந்த முரசொலி மாறனின் மைந்தர்கள் போட்ட திட்டம்தான் என்று அப் போது கலைஞருக்கு தெரியவில்லை.

அமெரிக்கா, பி.ஜே.பி.யைவிட காங்கிரசை கையாள்வது எளிது என்ற எண்ணம் கொண்ட நாடு. பி.ஜே.பி.யுடன் கூட்டணியில் இருந்த அல்லது அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகித்த ஜார்ஜ் பெர் னாண்டஸ், ஒரு அமெரிக்க எதிரி என்ற கருத்தே அமெரிக்காவிற்கு மேலோங்கி இருந்தது.

அவரும் அவ்வாறே நடந்து கொண்டார். இந்தியாவின் பொரு ளாதாரம் வீழ்ச்சி அடைய 1991 இல் ராஜீவ் கொலைக்கு பிறகு வந்த நரசிம்மராவ் ஆட்சியே காரணம் என்று ஜார்ஜ் கூறி வந்தார். அமெ ரிக்க பொருளாதார கொள்கை களை அந்த ஆட்சி அனுமதித்த தால்தான் இந்திய பொருளாதாரம் கெட்டு விட்டது என்று ஜார்ஜ் பரப்புரை செய்து வந்தார்.

ஆகவே ஜார்ஜ் தலைமையிலான என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயக கூட்டணியை விட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே தங்களுக்கு சாதகமானது என்று அமெரிக்க கருதியது. திமுக எப்போதுமே அமெரிக்கக சார்பு நிலை எடுக்கும் கட்சி என்பதால், அவர்கள் காங்கிரஸ் தலைமயிலான கூட்டணியையே விரும்பினர்.

தவிர தோஹா புகழ் முரசொலி மாறனின் மைந்தர்கள், தந்தையின் உணர்ச்சிமிகு பி.ஜே.பி. உறவை அறுத்தெறிந்து, சோனியா காங்கி ரஸ் உறவை எடுக்க கலைஞரை வற்புறுத்தினர். அதனால் யு.பி.ஏ. என்ற ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியில் திமுக சேர்ந்தது. நியூ யார்கை சார்ந்து வணிக உறவு களை பலப்படுத்தி வந்த கலாநிதி அதையே விரும்பினார்.

அதனாலேயே தங்குதடையின்றி தயாநிதி முக்கிய அமைச்சர் பதவியை பெற முடிந்தது. அதற்கும், அன்றே டில்லி சென்ற மு.க. மூன்று நாள் உட்கார்ந்து, தயாநிதி கேட்ட, ஐ.டி. அமைச்சரவையை விடாப்பிடியாக போராடிப் பெற்றார். அந்த அளவுக்கு அந்த அமைச்சகத் தில் உள்ள கொள்ளை வாய்ப்பு களை தயாநிதி அறிந்தே வைத்தி ருந்தார். அதனால்தான் அதையே கலைஞரிடம் முரண்டு பிடித்து வாங்கினார்.

அதற்கு தங்களது தொழிலான காட்சி ஊடகம் சம்பந்தப்பட்டது என்றும் பொய் கூறினார். கலைஞரும் அதை நம்பி விட்டார். தன்னிடம் கொடுக்கப் பட்ட அந்த ஐ.டி. அமைச்சகம் மூலம், ஒரு புறம் ஸ்பெக்ட்ரம் வணிகமும், மறுபுறம் டி.ஆர்.ஏ.ஐ. மூலம் ஊடக சித்து விளையாட்டுகளையும் தயா நடத்தத் தொடங்கினார்.

அனைவரும் அவரது காட்சி ஊடக சார்பு சித்து விளையாட்டு களையே கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர் சிறிது, சிறிதாக ஸ்பெக்ட்ரம் பெரும் அள வில் கொள்ளையடிக்க ஏதுவான தொழில் என்பதைப் புரிந்து அதன் உரிமங்களை, கார்பொரேட்களுக்கு பழைய அடிமாட்டு விலையில் விற்கத் தொடங்கினார். அதற்காக பிரதமர் மன்மோகனை தன் கையில் போட்டுக் கொண்டார்.

சோனியாவை அத்தை என்றும், மன்மோகனை மாமா என்றும் தயா அழைக்கத் தொடங்கினார். இளம் தயாவின் அந்த ஆங்கில அழைப்பிலேயே அவர்கள் மயங்கி விட்டனர். அமைச்சரவை ஒப்புதல் என்று கூறி, பழைய 2001 ஆம் ஆண்டு விலைக்கே உரிமங்களை அவர் விற்றதை யாரும் கண்டு கொள்ள வில்லை. கிடைக்கும் லாபங்களில், சோனியா குழுவினரையும் கவனித்து வந்தார்.

இந்தியாவில் பாரம்பரிய முதலை டாடா. அவர் எந்த புதிய தொழில் வந்தாலும் அதை ஆக்கிரமிக்க எண்ணுவார். மிகவும் தாமதமாக புரியப்பட்ட, கைபேசி தொழிலின், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அவரும் வேண்டினார். ஆனால் புதிய திடீர் பணக்காரர் ரிலையன்ஸ் அதில் நுழைந்து போட்டியிட்டது. அம்பானி சகோத ரர்கள் எதை கொடுத்தாலும் அதிக கமிசன் கொடுத்து உரிமம் வாங்கு வதில் கெட்டிக்காரகள்.

அதனால் அவர்கள் தயாவை பிடித்து விட்டார்கள். சுனில் மிட் டல் தயாவிற்கு வேண்டியவரா னார். டாடா விற்கும், தாயாவிற்கும் தகராறு ஏற்பட்டது. அதை ஊடக வணிக முரண்பட்டு என்று அப் போது தமிழகத்தில் வர்ணித்துக் கொண்டார்கள். அது ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்டது என்பது அப்போது அமபலத்திற்கு வரவில்லை. உரிமம் கிடைக்காமல் கோபமடைந்த டாடா, திமுக குடும்ப தாத்தாவை தொடர்புகொள்ள ஆரம்பித்தார்.

அப்போது உதவியவர் நீரா ராடியா. அவர் தனது முதலாளிக்கு விசுவாசமாக அரசியலில் தரகு வேலை செய்வதில் கெட்டிக்கார ராக இருந்தார். அதனால் டாடா சார்பாக மு.க.விற்கு, தயாவை ஓரங் கட்ட அறநூறு கோடி கொடுக்கப் பட்டது. அதை வாங்கிய கலைஞர், "ஓடு மீன் ஓட, உறுமீன் வரும் வரை யில், வாடி இருக்குமாம் கொக்கு' என்பதை உணர்ந்தவர்.

காத்திருந்த கருணாநிதி, தயாவை குறிப்பிட்ட அமைச்சகத்திலிருந்து கழட்டுவதற்காகவே, கட்சியிலிருந்தும், அதையொட்டி மத்திய அமைச்சரவையிலிருந்தும் கழட்டினார். குடும்பத்திற்குள், ராஜாத்தி எதிர்ப்பில், தயாளுவின் பிள்ளைகளான அழகிரியும், ஸ்டாலினும் ஒன்றாக இருந்து வந்தனர். ஸ்டாலி னுக்கு தயா ஆதரவு என்பதால் பதிக்கப்பட்ட அழகிரி, புதிய கூட்ட ணியை கனிமொழியுடன் கட்டிக் கொண்டார்.

மீண்டும் தாத்தாவுடன் சேர்வ தற்காகவும், மத்திய அமைச்சரவை யில் இடம் பிடிப்பதற்காகவும் தயா தயாளு மூலம் ஒரு அறநூறு கோடியை தட்சண்யமாக செலுத்தி னார். அதற்குள் டாடா மூலம், தாத் தாவிற்கு அந்த செய்தி போய் சேர்ந் தது. 2004 முதல் 2007 வரை, ஸ்பெக்ட்ரம் ஊழலில், தயா அடித்த கோடிகள் பற்றிய செய்தி குடும்ப தலைவர் வசம் போய் சேர்ந்தது. அந்த ஸ்பெக்ட்ரம் ஆசை அவரையும் தொற்றிக் கொண்டது.

திமுக தலைவர் ஏற்கனவே மருமகன் முரசொலி மாறனிடம் பினாமியாக இருந்த ஆ.ராஜா வையே தேர்ந்தெடுத்தார். ஐ.டி. அமைச்சகம் மீண்டும் திமுகவிற்கு வேண்டும், அதுவும் தனது பினா மிக்கே வேண்டும் என்பது தலை வரின் ஆசை. அதுதான் ராஜாவி டம் அது வந்த கதை. அதற்கு முழு மையாக பயன்பட்டவர் ராஜாத்தி அம்மையார். அவர் தனது மக ளையும் அதற்கு பயன்படுத்திக் கொண்டார்.

இலக்கியத்திலும், பெண்ணுரி மையிலும் லயித்துவந்த கனிமொ ழியை, மெல்ல, மெல்ல கருணாநிதி, அரசியலுக்கு இழுத்து கரைக்க தொடங்கினார். தாய் # தந்தையின் அழுத்தத்தில் மகள், ஊழல் அரசியலில் கரையத்தொடங்கினார்.

இப்போதும் டாடா கொடுத்த வோல்டாஸ் நிலம், அண்ணா சாலையில் குடும்பத்தின், சி.ஐ.டி. காலனியை ஆட்டுவித்து வருகி றது. அதுவே கனிமொழி மீது இன் னொரு வழக்காக வரும். டாடாவிற்கு தாத்தா கொடுக்கும் சலுகை கள், ராஜா மூலம் வலுப்பெற்றன. இப்போது டாடா ஆட்கள் நீரா, ராஜா, மும்பை பால்வா, கனிமொழி என்று வரிசையாக மாட்டிக் கொண்டார்கள். அவர்களும் திஹார் சிறையில் கம்பி எண்ணுகி றார்கள். இடையில் அழகிரி சமாதானமான பிறகு, தன்வசம் இழுத்துக் கொண்டார் தயாநிதி. அதுவே ராஜாத்தி - ராஜா - கனிமொழி கும்பலுக்கு எதிராக இன்று வரை அழகிரியை நிறுத்தி விட்டது.

தயாவின் எதிரிகள் இப்படி வரிசையாக மாட்டினால், அதை 2007 ஆம் ஆண்டில், தான் ஏமாற்றப்பட்டபோது, தனது தினகரன் நாளேட்டிலும், சன் காட்சி ஊடகத்திலும், முதலில் அம்பலப்படுத்தியது தயாநிதிதான் என்பதை யார் மறப்பார்கள்? அந்த சதி தாத்தாவிற்கும் தெரியும், ராஜாவிற்கும் தெரியும், கனிமொழிக்கும் தெரியும், ராஜாத்திக்கும் தெரியும், டாடாவிற்கும் தெரியும். அதனால் அவர்களும் பதிலடி கொடுக்காமல் விடப் போவதில்லை.

Pin It