உன் மகளிடம் நீ அனைத்தையும் தந்துவிட்டாயா?
அம்மா கேட்கிறாள் இருண்ட கண்களின் ஆழத்திற்குள்
விழுந்து கொண்டிருக்கிறது எங்கள் சமையலறை
பாய்ந்து பெருகும் நதிக்குள்
என் நைந்த தாலிச்சரடை கையிலேந்தி
என்னையும் இழுத்தவாறு நீந்த ஆரம்பிக்கிறாள் அவள்
குடிகூரா பவுடன் வாசனையுடன் நான் என்
மகளின் மகளுடைய கனவில் எழுகிறேன்
ஒற்றைப்படையில் அமைந்த எண்களுடன் நிரம்பி
இருக்கிறது இந்த ஆஸ்பத்தி
மேலும் சில பழங்கள், மீன்கள்
சாப்பிடச் சொல்லி செல்கிறது வெள்ளைநிறம்
நிறமற்று பெருகுகிறது பி-பாஸிடிவ் ரத்தம்
எந்த வாசனையும் நிறமுமற்ற ஒரு உலகில்
உறங்கிக் கொண்டிருக்கிறாள் மகளின் மகள்
வெள்ளை நிற இட்லிப் பூக்களை நள்ளிரவில்
பிரசவித்திருக்கிறது மெடர்னிடி வார்டு
பார்த்தே வளர்ந்த இந்த மரம்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
வனம் - செப்டம்பர் 2007
- விவரங்கள்
- கீதாஞ்சலி பிரியதர்ஷினி
- பிரிவு: வனம் - செப்டம்பர் 2007