கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
கீற்றில் தேட...
அறம்
- விவரங்கள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
- பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015