0
தானிய
விளைச்சல் இல்லை...
காயப்போட
முற்றம் இல்லை...
காவலாய் இருந்து
கதைகள் பேசிட
படிகள் இல்லை...
புடைத்தல்...
குத்தல்...
திரித்தல்...
அரைத்தல்...
எதுவுமின்றி
சிந்துதல்...
சிதறுதல் இதுவுமின்றி
சிட்டுக்குருவிகள் மட்டும்
 எப்படி?
- பே.இராஜேந்திரன், பாளையங்கோட்டை

Pin It