நேசிக்கும் சிறுமியின் அணைப்பில்
வால் தொங்க
ஒடுங்கிக்கிடக்கிறது பூனைக்குட்டி!
சிறுமியின்
இடத்தில் நீயும்
பூனைக்குட்டியாய் நானும்
2
விட்டுப் பிரிந்து...
மறுத்து மறுத்துப்
பின் ஒருவழியாய்
உன்னை ஏற்றேன்1
இப்போதோ நீ
பெரிய மரத்தை
வெட்டிச் சாய்த்த
நினைவோடு
தோளில் கோடாரியுடன்
கம்பீரமாய்
போய்க் கொண்டிருக்கிறாய்!
3
கரம்
ஓடிவரும் மஞ்சள் நதி
ஆங்காங்கே
விரிந்தும் குறுகியும்
மேடிட்டும் குழிந்தும்
ஐந்தாகப் பிரிந்து
விரல்கள் என
விளிம்புகட்டி நிற்கிறது!
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்