பாதையும் முடிந்தபாடில்லை
பயணமும்
ஓய்ந்தபாடில்லை
வாழ்க்கை
விருப்பங்கள்
வேட்டையாடுகின்றன
தொடரும் தோறும்
தொட்டணைத்தூரும் கேணி
பாறையில்
பால் கறக்கத் துணியும்
மனம்
அரும்புகள்
மலர்களாகிக் குலுங்குகின்றன
தேவைகள் ;
வேராய் ஆசைகள்
வசப்படுத்த
வானத்தில்
கட்ட வேண்டியிருக்கிறது
வண்ணப் பாலம்
தெளிவற்று
தொடர்வதிலும் உண்டு
தாவும் தெளிந்த நீரில்
குமிழ்ந்திடும் மகிழ்ச்சி...
ஆனாலும்
சலித்துக் கொள்வதில்
நிமிர்ந்து கொள்கிறது ;
படுக்கும்போதும்
எழுந்து நடக்க விரும்பும்
வாழ்க்கை...