ஒரு
வெற்றுக் காகிதம்
சில சமயம் கவிதையாகிறது

சில கவிதைகள்
வெற்றுக் காகிதத்தில்
கையெழுத்து இட்டதால்
கடனாளி ஆகின்றன

முன்பு வெற்றுக் காகிதங்களாய் இருந்த
சில
விவாகரத்து பத்திரங்கள்
வாழ்க்கையை
சிவப்பு குறுக்கு கோடிட்ட
வெற்றுக் காகிதங்களாக்குகின்றன

சில கடிதங்கள்
கொடுக்கப்படாத சேருமிடங்களால்
வெற்றுக் காகிதங்களாகின்றன

நானும் ஒரு
வெற்றுக் காகிதம் வைத்துள்ள போதும்
எழுதியவற்றையே எடுத்துக் கொள்கிறேன்
எப்போதும்,
என்முன் சம்மணம் இட்டு
விண்ணப்பிக்கும்
வெற்றுக் காகிதங்களுக்கு
உரக்க பதில் கொடுத்து!

- அருணாசலசிவா

Pin It