மறுமலர்ச்சி யுகம் - 29: போலந்து சினிமா

போலந்தின் துவக்க கால இயக்குனர் அலெக்ஸாண்டர் கோர்டா 1952ல் பஸ்காதெருவிலிருந்து ஐந்து பையன்கள் என்ற பெயரில் இயக்கிய படம் போலந்து சினிமா வரலாற்றில் முக்கிய்மான இடத்தைப் பிடித்த திரைப்படம்.அதற்கு முன் வரை போலந்து இரண்டாம் உலகப்போர் முடிவுறும் வரை ஹிட்லரிடம் மாட்டி சிக்கிச் சீரழிந்து உருக்குலைந்து போயிருந்தது. 1945க்கு பிறகுதான் மெல்ல தலையெடுத்த தேசம் சினிமாவைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கத் துவங்கியது. அதற்காக லாட்ஸ் எனும் திரைப்படப் கல்லூரியையும் துவக்கியது. துவக்கிய வேகத்தில் அதிலிருந்து மூன்று இயக்குனர்கள் வெளிப்பட்டனர். அவர்களூள் ஒருவர்தான் அலெக்ஸாண்டர் கோர்டா. கோர்டா எடுத்த பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்களுக்கும் உலக சினிமாவுக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால் அப்படத்தில் உதவி இயக்குனராக ஒருவர் பஸ்காதெருவின் ஆறாவது பையனாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் போலந்து என்ற தேசத்தின் பெயரை உலக சினிமா தளத்தில் உயரப்பிடித்து எழுந்தவர். அவர் ஆந்த்ரே வாஜ்டா

ஆந்த்ரே வாஜ்டா (Andrzej Wajda)

சினிமாவின் இலக்கணம் அதன் காட்சி மொழி.

கேமராவுக்கும் கத்திரிக்குமிடையிலான இயக்குனரின் படைப் பாக்கத்தில் அதன் புரிதலில், இரு தொழில் நுட்பங்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டதன் மீதான காதலில் எழுகிறது இந்தக் காட்சி மொழி.

இந்த காட்சி மொழியில் பாண்டித்யமும் செய் நேர்த்தியுமிக்க மகத்தான உலக இயக்குனர்களின் பட்டியலில் அகிராகுரசேவா, ஜான் போர்ட் ஆகிய மேதைகளின் வரிசையில் போலந்து இயக்குனர் ஆந்த்ரே வாஜ்டாவுக்கென ஒரு சிறப்பிடம் உண்டு.

பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்கள் படத்துக்குப் பிறகு தன் சினிமாவாழ்க்கையைத் துவக்கிய ஆந்த்ரே வாஜ்டாவின் முதல் படம் ஜெனரேஷன் A Generation 1954ல் வெளியானது. கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் நடித்த ஜிபுவுஸ்கிக்கு போலந்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டானது. இதில் நடித்த இன்னொருநடிகர் போலந்து வெளிக்கொணர்ந்த மற்றொரு உலகசினிமா இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி. ஜெனரேஷனுக்கு பிறகு வாஜ்டா இயக்கத்தில் வெளியான Kanał (கனால்) மற்றும் Ashes and Diamonds ஆசஸ் அண்ட் டைமண்ஸ் என வெளியான அடுத்தடுத்த படங்களும் கம்யூனிச கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் கனால் படம் அவருக்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கப்பனை விருதை வாங்கித்தந்தது. 1968ல் இவர் எடுத்த Every thing for sale எவ்ரிதிங் பார் சேல் எனும் படப்பிடிப்பின் போது இவரது ஆஸ்தான நாயகனும் போலந்து சினிமாவின் உச்ச கலாச்சார பிம்பமுமாக விளங்கிய வருமான ஜ்ஜிபுவுஸ்கி ரயில் பயணத்தின் போது எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணம் அடைய படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. 

அடுத்து என்ன செய்வது எனத் தெரியாத நிலை. தயாரிப்பு நிர்வாகம் வேறு நஷ்டகணக்கைத் தாங்க முடியாமல் வாஜ்டாவைத் தொந்தரவு செய்யத் துவங்க... நாளை ஷ¨ட்டிங் என சட்டென குழுவினருக்கு உத்தரவிட்டார்... அனைவரும் புருவங்களை உயர்த்தினர். இவர் இனி யாரை வைத்துப் படமெடுக்கப் போகிறார் என ஆச்சர்யத்துடன் பின் தொடர்ந்தனர். பிறகு தான் அவர்களுக்குப் புரிந்தது. இப்போது கதையில் நாயகன் வாஜ்டா எனும் இயக்குனர். தன் புதிய படத்தில் நடித்த ஒரு பிரபலமான நடிகன் பாதியில் இறந்து போக அதிர்ச்சியில் உறைகிறார். பின் அந்த இயக்குனர் அனுபவிக்கும் பிரச்னைகளும் இது விடய மாக யார்யாரெல்லாம் பாதிக்கிறர்கள், சமூகம் இதனை எப்படியாகப் பார்க்கிறது என்பதே மீதிக்கதை. வாஜ்டாவின் இந்த அசாத்திய யோசனை மிகச்சிறந்த திரைக்கதையாக மாறி படத்தின் தரத்தை பெலினியின் 81/2 அளவுக்கு உயர்த்தியது. தொடர்ந்து வாஜ்டாவின் திரைப்படங்கள் உலகசினிமாவுக்கு கலைப்பொக்கிஷங்களாக அணிவகுத்து நின்றன.

அவற்றுள் Man of Marble (1976) - மேன் ஆப் மார்பிள் மற்றும் The Orchestra Conductor (1980) ஆர்கஸ்ட்ரா கண்டக்டர் போன்றவை வாஜ்டாவின் மேதைமைக்கு சான்றுகள், இவற்றுள் மேன் ஆப் மார்பிள் இக்காலத்தில் பயன்படுத்தப்படும் பின் நவீனத்துவ கதையாடல்களுக்கு முன்மாதிரி. சிறந்த திரைக்கதை வடிவத்துக்கும் உத்திகளுக்கும் இப்படம் ஒரு நல்லதொரு பயிற்சி பாடம். 1981ல் இவர் இயக்கிய மேன் ஆப் ஐயர்ன் Man of Iron பாரீசின் கான் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான பரிசைப் பெற்றது.

வாஜ்டாவின் படங்களுள் நான்கு படங்கள் தொடர்ந்து சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு வந்துள்ளன என்பது உலகின் இதர இயக்குனர்கள் எவருக்கும் இல்லாத சிறப்பு.

ரோமன் பொலான்ஸ்கி (Rajmund Roman Thierry Polanski)

பல உலக சினிமாக்களை மிஞ்சும் திரைக்கதையைக் கொண்டது பொலன்ஸ்கியின் வாழ்க்கை. போலந்து பெயரை உலக அரங்கில் வாஜ்டாவுக்குப்பிறகு தோளில் தூக்கிச் சென்றவர் பொலன்ஸ்கி. ஹிட்லரது நாஜி ஆக்ரமிப்பில் தன் கண் முன்னே தாய் தந்தையை ராணுவத்தினர் வதை முகாம்களுக்கு இழுத்துச் செல்வதைக் கண்டு அங்கிருந்துதப்பித்தார்.

...க்ராக்கோ நகர வீதிகளீல் பத்து வயதில் சுற்றிலும் குண்டு மழை பொழிய தனி ஆளாய் அனாதையாய்த் திரிந்து... ஒரு விதவைப்பெண்ணின் வீட்டில் தஞ்சமடைந்து பின் இரவில் அவளது பாலியல் துய்ப்பிற்கு ஆட்பட்டார்... பின் அங்கிருந்தும் தப்பித்து வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து இறுதியாக மாமாவீட்டில் தங்கி படித்துவந்தவர் பொலான்ஸ்கி.

பள்ளியில் தான் யூதன் என்று தெரிந்தால் அவமானப்படுவோம் என தன் பெயருக்கு முன்னால் அவர் ரோமன் என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டார். பின் அதுவே அவருடைய முழுப்பெயருமாக மாறியது.

போருக்குப் பிறகு திரும்பி வந்த தந்தையுடன் இணைந்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் துவக்கினார். திரைப்படக் கல்லூரியில் அறிமுகமான தனக்கு மூத்த மாணவரான ஆந்த்ரேஜ் வாஜ்டாவுடன் இணைந்து கொண்டார். அவரது ஜெனரெஷன் படத்தில் இவருக்கு நடிகராக பரிமளிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. வாஜ்டா எனும் மிகசிறந்த குருவுடன் பணியாற்றிய பொலான்ஸ்கியின் முதல் படம் Knife in the Water நைஃப் இன் தி வாட்டர் 1962ல் வெளியாகியது.

கடல் ஒரு படகு இவற்றுடன் ஒரு தம்பதி புதிதாக வரும் இளைஞன்... என மூன்று பாத்திரங்களுடன் நகரும் திரைக்கதை மனிதர்களின் உள் மன அழுக்குகளை மௌனமாக நமக்குப் படம்பிடித்து காண்பித்தபடி இறுக்கமாக நகர்கிறது. படத்தின் தலைப்பில் வரும் கத்தியை ஆண்குறியின் குறியீடாகப் பார்ப்பதாக விமர்சகர்கள் இப்படத்தை உச்சி முகர்ந்தனர். விமர்சனங்கள் பொலான்ஸ்கியை உலகசினிமா அரங்குக்கு முன் மொழிந்தது. பல திரைப்படவிழாக்களில் பங்கேற்ற இத்திரைப்படம் சிறந்த அந்நிய தேசத்து படப்பிரிவில் ஆஸ்கார் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டு அங்கு தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் இயக்கிய பொலான்ஸ்கி வெற்றி இயக்குனராகப் பரிணமித்தார். அவரது படங்களில் காணப்பட்ட மிதமிஞ்சிய வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள் ஹாலிவுட்டுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து கொடுத்தது. ஆனால் அதற்குமுன் அவர் வாழ்க்கை சில சிக்கல்களை எதிர்கொண்டது. அங்கு அவர் இயக்கிய Rosemary's Baby (1968) ரோஸ்மேரீஸ் பேபி எனும் படம் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் பரிசுக்கு அவரைப் பரிந்துரைத்தது.

1974ல் இவர் இயக்கிய Chinatown சைனா டவுன் இவருக்கு ஆஸ்கார் பரிசையும் பெற்றுத் தந்தது. 1979ல் வெளியான டெஸ் Tess திரைப்படமும் இவருக்கு பல விருதுகளைப் பெற்றுத் தந்து உயரத்துக்கு அழைத்துச் சென்றது அதன்பிறகு இவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த இருபது வருடங்களுக்கு முழுவதுமாக முடக்கின.

புதிர்களும் மர்மமும் நிறந்த பொலன்ஸ்கியின் வாழ்க்கைப் பக்கங்களில் முதல் மனைவியாக வந்து சேர்ந்தவர் பார்பரா. நடிகை... இரண்டொரு வருடங்களில் இவரை விவாகரத்து செய்துவிட்டு லண்டனில் தன் படத்தில் நாயகியாக நடித்த ஷ்ரோன் டேட்டை மணந்தார்.

இக்காலத்தில் மிகவும் உலகம் முழுக்க வலுத்து வந்த கட்டற்ற ஹிப்பி வாழ்க்கையில் வீழ்ந்தார். மது மாது கட்டற்ற முறைகளற்ற பாலுறவு ஆகியவற்றில் தன் மனைவியுடன் இணைந்தே ஈடுபட்டார். வாழ்வின் மீதான வெறுப்புதான் என்னை இந்த உயரத்துக்கு அழைத்துச் சென்றது என வெளிப்படையாகக் கூறிய இவரது இந்த கேளிக்கை வாழ்வு மனைவியின் மர்மமான மரணத்தோடு ஒரு முடிவுக்கு வந்தது. பொலான்ஸ்கி படப்பிடிப்புக்கு சென்ற நாளில் பூட்டிய வீட்டில் அவரது மனைவி மற்றும் தோழிகள் இருவர் மர்ம ஆசாமிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் லண்டனை உலுக்கியது. பொலன்ஸ்கி கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அக்கொலையைச் செய்தவன் போலீசாரால் சிறைபிடிக்கப் பட்டு உண்மை விவரங்கள் வெளிவர பள்ளியில் தான் யூதன் என்று தெரிந்தால் அவமானப்படுவோம் என தன் பெயருக்கு முன்னால் அவர் ரோமன் என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டார். பின் அதுவே அவருடைய முழுப்பெயருமாக மாறியது.

பொலான்ஸ்கி வெளிவந்தார். இக்கொலையைச் செய்தவன் மிகப் பெரிய ராக் இசைக்கலைஞன். பல கிரிமினல் வழக்குகளுக்காக புகழ் பெற்றவன் என்பவை அக்காலகட்டத்தின் கலாச்சாரக் குலைவுகளை நமக்கு உணர்த்தவல்லது. பின் ஹாலிவுட்டுக்குச் சென்று பெரும் வெற்றி பெற்ற இயக்குனராகப் பவனி வந்த பின்னும் துர்பலன் அவரை விடாமல் துரத்தியது. மார்ச்11,1977அன்று புகழ்பெற்ற வாக் எனும் இதழ் அதன் அட்டைப்படத்துக்காக பொலன்ஸ்கியை அணுகியது. மாடலாக வந்த பெண் சமந்தா. 13 வயது. ஆனாலும் தோற்றத்தில் ஆளுமை. பிரான்ஸில் ராபர்ட்டிநீரோவின் நீச்சல்குளம் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் அனுமதி வாங்கி பொலான்ஸ்கி அவளை கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்தார்.

இரண்டம் நாள் நடிகையின் அம்மா பாரிஸ் போலீசில் தன் மகளை பொலான்ஸ்கி வன்புணர்ச்சி செய்து விட்டார் என குற்றச்சாட்டு வீச அடுத்த நாள் உலக பத்திரிகைகள் அனைத்திலும் பொலான்ஸ்கி செய்தியானார். இவ்வழக்கில் கலிபோர்னியா சிறையில் 90 நாட்கள் கழித்த பொலான்ஸ்கியின் திரையுலக வாழ்க்கை பெரும் இருளை சந்தித்தது. அதன்பின் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு சுவிட்சர்லாந்து வந்து தன் மண்ணில் தஞ்சம் புகுந்தார். அந்த வழக்கு நிமித்தம் அமெரிக்க கோர்ட்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டபோது சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது.

இவ்வழக்கிலிருந்து மீண்டுவர பொலான்ஸ்கிக்கு வெகுநாட்கள் பிடித்தது. அதன்பிறகு மீண்டும் இயக்குனராகிய பொலான்ஸ்கி 1989ல் பிராண்டிக் Frantic  எனும் படத்தில் நடித்த நாயகியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

என்னதான் போலந்து தேசத்திலிருந்து பொலான்ஸ்கி சென்றாலும் அங்கு அவருக்கு வெகுநாட்கள்வரை போதிய மதிப்பளிக்கப்படவில்லை. காரணம் ஒரு யூதனாக அவர் பட்ட கஷ்டங்கள் பல இருந்தும் அவர் தன் வாழ்க்கைக்கு படத்தின் மூலம் உண்மையாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

நெடுநாட்களாக தன் மீதிருந்த இக்குற்றச்சாட்டுக்கு பதில்அளிக்கும் வகையில் 2002ல் இவர் இயக்கிய திரைப்படம் The Pianist பியானிஸ்ட். அந்த ஒரு படம் அவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் கழுவி எடுத்து மீண்டும் அவரை உலக சினிமாவின் நட்சத்திரமாகப் பிரகாசிக்க செய்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது என எண்ணற்ற விருதுகளை அவருக்கு வாங்கித் தந்து இழந்த பெருமைகளை மீட்டுக் கொடுத்தது. அதன்பிறகு 2005ல் ஆலிவர் ட்விஸ்ட் Oliver Twist எடுத்து தன் புகழைத் தக்க வைத்துக்கொண்ட பொலான்ஸ்கியின் சமீபத்திய படம் 2010ல் வெளியான The Ghost Writer கோஸ்ட் ரைட்டர். தன்னுடைய 83 வயதில் அவர் இயக்கி வெளியிட்ட இப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் தங்ககரடி பரிசு பெற்றிருப்பது நாம் அனைவரும் உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்.

Pin It