கூடங்குளம் அணு உலையை எதிர்த்து தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டங்கள்

"தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படையிடமிருந்து பாதுகாக்காத இந்திய அரசு, அணு உலை ஆபத்திலிருந்தும் தமிழகத்தைப் பாதுகாக்காது" எனக் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 அன்று மாலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

இந்திய அரசின் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்து, இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் ஒருமித்த குரலில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் அம்மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், கூடங்குளம் மற்றும் கல் பாக்கம் அணுஉலைகளை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது பேசிய அவர், "கூடங்குளம் அணுஉலையின் ஆபத்தி லிருந்து தமிழகத்தை இந்திய அரசு பாதுகாக்காது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை இந்திய அரசுக்கு எப்போதுமே இருந்த தில்லை. நேற்று 4 சுறா மீன்களைப் பிடித்து விட்ட தாகக் கூறி இந்தியக் கடலோரக் காவல்படை, தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்திருக்கிறது. இதுவரை 560க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள இனவெறிக் கடற்படை நடுக்கடலிலும் தமிழகக் கடலோரத்திலும் சுட்டு வீழ்த்திய போதும், நம் மீனவர்களை நடுக்கடலில் நிர்வாணப்படுத்தி, வலை களை சேதப்படுத்தி கொடுமை புரிந்த போதும் அதைத் தடுக்க இந்தியக் கடற்படை முன்வரவில்லை. ஆனால், சுறா மீன்களைப் பாதுகாக்கிறோம் என இந்தியக் கடற்படை, நம் மீனவர்களை கைது செய் திருக்கிறது. சுறா மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, நம் தமிழ்நாட்டு மீனவனுக்குக் கிடையாதா?

இப்படிப்பட்ட இந்திய அரசு தான் இலட்சக் கணக் கில் தமிழீழ மண்ணில் நம் சொந்தங்களை கொல்ல உதவியது. இதே தமிழினப் பகையுடன் தான், நமக்குக் காவிரி நீரை மறுக்கும் கர்நாடகத்திற்கும், முல்லைப் பெரியாற்று நீரை மறுக்கும் கேரளத் திற்கும், பாலாற்று நீரை மறுக்கும் ஆந்திரத் திற்கும் தமிழ்நாட்டின் நெய்வேலியிலிருந்து மின்சா ரத்தை அனுப்புகிறது. வடநாட்டு முதலாளிகளுக்கும், பன் னாட்டு நிறுவனங்களுக்கும் அனுப்புகிறது.

இப்படி தமிழின விரோதத்தை நெஞ்சில் சுமந்து செயல்பட்டு வரும் இந்திய அரசு, கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளால் வரும் ஆபத்துக் களில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் என்று நாம் எப்படி நம்புவது? நிச்சயமாக பாதுகாக்காது. நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கப் பெற்றால், இங்கு மின்வெட்டு கிடையாது. நாம் மின்சாரத்தில் உபரி மாநிலமாக இருப்போம். மேலும், காற்றாலை, கதிரவன் ஒளி, கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மாற்று வழியில் மின்சாரம் தயாரிப்பதையும் நாம் ஊக்குவிக்க வேண்டுமே தவிர, மனித உயிருக்கு உலை வைக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டக் கூடாது.

எனவே, கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும், நெய்வேலி மின்சாரத்தை முழுவதும் தமிழகத்திற்கே வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்திப் பெற வேண்டும்" என்றார். மேலும், கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்து, மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ‘அணுஉலை எதிர்ப்பு மாநாடு’ திசம்பர் 11 அன்று நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் மற்றும் பொதுச் செயலாளர் திரு.தேவராசு, கல் பாக்கம் அணுமின் நிலையக் கதிர்வீச்சுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து வெளியிட்ட மருத்துவர் வீ.புகழேந்தி, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் எழுச்சி இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி, தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப் பினர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பேரூராட்சி மன்றம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தமிழ்மணி தலை மை தாங்கினார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தோழர் பால்ராசு, தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகி தோழர் துரை அரிமா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி னர்.திரளான பெண்கள் இதில் பங்கேற்றது குறிப் பிடத்தக்கது.

ஓசூர்

ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங் கினார். பா.ம.க. மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு.விசுவ நாதன், ஈரம் அமைப்பின் செயலாளர் திரு.பழ.பால சுந்தரம், ம.தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் திரு. இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் செந்தமிழ், தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் முரு கேசன், பெ.தி.க. அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி, பசுமைத் தாயகம் அமைப்பாளர் தோழர் சு.முருகன், த.தே.பொ.க. செயலாளர் தோழர் ரமேசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப் பினர் தோழர் கோ.மாரி முத்து பேசினார்.

தஞ்சை

24.10.2011 அன்று மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் தொடர் வண்டி நிலையம் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க. பட்டுக்கோட்டை செய லாளர் தோழர் வெ.இராசேந்திரன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் முரு கய்யன், நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப் பினர்கள் தோழர் லெ.ராமசாமி, தோழர் க.காமராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

செங்கிப்பட்டி

24.10.2011 மாலை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் சாணூரப்பட்டி கடை வீதியில் கொட்டும் மழைக்கிடையே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தேபொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. இரா.நந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. விடுதலைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆ.சண் முகம்,தோழர் ச.காமராசு, தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, ம.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் தோழர் சா. புண்ணியமூர்த்தி, த.இ.மு. ஒன்றிய செயலாளர் தோழர் கெ.செந்தில்குமார், மக்கள் உரிமை இயக்க செயலாளர் தோழர் பழ.இராஜ்குமார், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மீனா, நாம் தமிழர் அமைப் பாளர் தோழர் பி.அற்புதராஜ், த.இ.மு. ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.ரமேஷ், த.தே. பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ந.கருப்பு சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தின் நிறைவில், த.தே.பொ.க. தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் நிறை வுரையாற்றினார்.

சிதம்பரம்

24.10.2011 மாலை சிதம்பரம் தெற்கு சன்னதி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மயிலாடுதுறைப் பேராசிரியர் த.செயராமன், தமிழக இளைஞர் முன்னணி சிதம் பரம் நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பேராசிரியரின் உரை அவ்வழியே போவோர் வருவோரையும் ஈர்த்து கட்டிப் போட்டது. தங்கள் பகுதியில் இப்பரப்புரையை நடத்துவதாக பலர் உறுதிகூறிச் சென்றனர்.

கீரனூர்

கீரனூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு கண்டன உரையாற் றினார்.

திருச்சி

திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள காதி கிராப்ட் முன்பு, 22.10.2011 அன்று மாலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே. பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானு மதி, தோழர் ஆத்மநாதன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கிளைச் செயலாளர் கவிஞர் இராசா இரகுநாதன், ம.திமு.க. இலக்கிய அணி புலவர் க.முருகேசன், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இனியன், த.ஓ.வி.இ. அமைப்பாளர் தோழர் நிலவழகன், தமிழ்நாடு வழக்கறிஞர் பேரவை தோழர் இளமுருகன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தோழர் பாட்டாளி, தோழர் லெட்சுமணன் (த.தே. பொ.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

23.10.2011 அன்று திருச்சி த.தே.பொ.க. நிர்வாகிகள் கூடங்குளம் இடிந்தகரையில் நடை பெற்று வருகிற உண்ணாப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து உண்ணாப் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொண்டனர். வழக்குரைஞர் த.பானுமதி வாழ்த்துரை வழங்கினார்.

Pin It