சற்றொப்ப நானூறு ஆண்டு காலம் தெலுங்கு நாயக்கர் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. நாயக்க மன்னர்களிடையே நடந்த சண்டையால் தஞ்சாவூரைக் கைப்பற்றிய மராத்தியர் ஆட்சி தஞ்சை மண்டலத்தில் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகள் நடந்தது. வட தமிழ்நாட்டில் அயல்மொழி பேசும் அயல் இனத்தவரான நவாபுகள் ஆட்சி நடந்தது. நவாபுகளின் ஆட்சி மொழி உருது. தில்லி மொகலாயப் பேரரசின் கீழ் ஐதராபாத் நிஜாம், அந்த நிஜாமின் கீழ் கர்நாடக நவாபுகள், அந்தக் கர்நாடக நவாபுகளின் வகையறாதான் ஆர்க்காடு நவாபுகள். நவாபுகள் ஆப்கானியர், பாரசீகர், அரேபியர் உள்ளிட்ட அயல் இனத்தவர் ஆவர்.

நானூறு ஆண்டுகளாக அயல் இனங்களின் ஆட்சியின் கீழும் அயல்மொழிகளின் ஆதிக் கத்தின் கீழும் சிக்கிச் சீரழிந்த ஓர் இனமும் அதன் மொழியும் எந்த அளவு சின்னா பின்னப் பட்டிருக்கும், பண்பாட்டுக் கீழிறக்கத்திற்குப் போயிருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். மூன்று தலை முறைகளுக்கு முன்னர் ஊரில் வசதி படைத்த முதன்மைக் குடும்பமாக இருந்த குடும்பம் வீழ்ச்சியடைந்து வறுமையுற்ற பின், அதன் மூன்றாவது தலைமுறையினர் செல்வம், செல்வாக்கு, நாகரிகம் அனைத் திலும் சீரழிந்து செல்லாக் காசுபோல் ஆனதை நாம் பார்க்கிறோம். நானூறு ஆண்டு களாக நசுக்கப்பட்ட தமிழினம் எந்த அளவு மலையிலிருந்து மடுவுக்குத் தள்ளப்பட்டிருக்கும்!

நானூறு ஆண்டு கால நாயக்கர், மராத்தியர், நவாபுகள் ஆட்சிக்குப் பின் தமிழர் ஆட்சி ஏற்பட்டதா என்ன? இல்லை. அயல் இனத்த வரான வெள்ளையர் ஆட்சி சற்றொப்ப 200 ஆண்டு காலம் நடந்தது. வெள்ளையர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் ஆட்சி ஏற் பட்டதா என்ன? இல்லை. ஆரியப் பிராமணியத் தத்து வத்தை அரசுத் தத்துவமாக ஏற்றுக் கொண்ட இந்திய ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் தமிழ்நாடு சிக்கிக் கொண்டது. இந்தியும் ஆங்கிலமும் தமிழகத்தில் கோலோச்சுகின்றன.

நாயக்க மன்னர்களுக்குக் கப்பம் கட்டும் பாளையப் பட்டுகள் இருந்ததுபோல் இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை பார்க்கும் மாநில ஆட்சி இங்கு நிலவுகிறது.

நானூறு ஆண்டு கால நாயக்கர் ஆட்சியில் தமிழினத்திற்கு வீழ்ச்சி, பிராமணர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் எழுச்சி! அதே போல் கீழிறக்கம் தமிழுக்கு, மேலேற்றம் சமற்கிருதத் திற்கும், தெலுங்கிற்கும்! தமிழ்நாட்டில் தமிழிசை பாடினால் தீட்டு, தெலுங்கில்தான் பாட வேண்டும் என்ற நிலை தகுதியின் அடிப் படையில் ஏற்பட்டதா? இல்லை. ஆட்சியின் அடிப்படையில் ஏற்பட்டது.

தமிழகத்தில் நிலவிய பிராமணர், தெலுங்கர், மராத்தியர், நவாபு பரம்பரையினரின் ஆதிக்கத்தை நீக்கி, தமிழர்களுக்குச் சமநீதி வழங்க வேண்டும் என்று ஆட்சி நடத்த வரவில்லை வெள்ளையர். காலனி ஆட்சி நடத்திக் கொள்ளையடிக்க வந்தவர்களே அவர்கள்! ஏற்கெனவே இங்கு ஆதிக்கம் செலுத்தியவர்களை அரவணைத்துக் கொண்டு வெள்ளையர் தங்கள் ஆட்சியை நடத்தினர்.

ஆங்கிலேயர்களுக்கு வர்ணா சிரமக் கொள்கை இல்லை என்றாலும் அவர்கள் வர்ணா சிரம ஒழிப்பை செயல்படுத்தித் தங்கள் ஆட்சிக்கு எதிரான உள்நாட்டுக் குழப்பங்களை உருவாக்கிக் கொள்ள விரும்ப வில்லை. அவர்கள் தங்கள் ஆட்சியின் பிற்காலத்தில் கொண்டு வந்த அனைவருக்கு மான பொதுக்கல்வியும், வரம்புக் குட்பட்ட குடிமை உரிமை களும் தமிழர்களிடையே ஓரளவு விழிப்புணர்ச்சி வள ரவும், சமூகத்தளத்தில் உரிமை கோரி செயல்படவும் வாய்ப் பளித்தன. அவ்விழிப்புணர்ச்சி யின் அடையாளங்கள்தான் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பா தியில் உருவான பல்வேறு சங்கங்களும் மன்றங்களும்.

நாயக்கர் ஆட்சியில் உச்சிக் குப் போன பிராமண ஆதிக்கக் கொடி 19ஆம் நூற்றாண்டிலும் ஆங்கிலக் கல்வி ஆங்கில நாகரிகம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து, உச்சியிலேயே பறந்தது. தங்கள் அடை யாளங்களை மீட்கவும், தங் களை உயர்த்திக் கொள்ளவும் முனைந்த தமிழர்கள் தங்கள் சாதிகளை ஆரியமயப்படுத்திக் கொள்ள விரும்பினர்.

ஒரு காலத்தில் தமிழர் அடையாளங்களாக விளங்கிய பார்ப்பார், ஐயர், அந்தணர் என்ற சிறப்புப் பெயர்களையும் பூணூலையும் ஏற்றுத் தங்களை உயர்த்திக் கொண்டனர் பிரா மணர்கள் என்று பார்த்தோம். பின்னர், நிலைமை தலைகீழாக மாறி, பிராமணப் புனைகதை களையும், ஆரியம் வகுத்த அடையாளங் களையும் ஏற்றுத் தங்களை உயர்த்திக் கொள்ள முனைந்தனர் தமிழர்கள்.

இந்தத் தலைகீழ் மாற்றத்தின் விளைவாக தமிழரிடம் உருவா னவையே சற்சூத்திரர், சத்திரியர், யாதவர் போன்ற ஆரியமயமாக் கப்பட்ட புனைவுகளும் சாதிப் பெயர்களும்.

ஆரியர்கள், சரியாக ஒலிக்கத் தெரியாமல்தமிழரைத் திரமிளர், திராவிடர் என்று குறிப் பிட்டனர். ஆரிய இலக்கியங் களில் ஆரியப் பார்வையுடன் “திராவிட” என்பது குறிக்கப் பட்டது. ஆரியமயப்படுத்தப் பட்ட “திராவிட” என்ற சொல்லை ஆரிய இலக்கி யங்களிலிருந்து எடுத்தாண்டார் மொழியியல் அறிஞரான கால்டு வெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்டமொழிகள் “திராவிட மொழிகள்” என்றார். பின்னர் வந்த ஐரோப்பிய வரலாற் றாசிரியர்கள் திராவிட இனம் என்ற பெயரில் தமிழர்களைத் தவறாகக் குறித்து வரலாறு எழுதினர்.

சமற்கிருதமின்றி இயங்கும் தமிழின் தனித்தன்மையை உலகுக்கு எடுத்துரைத்த கால்டு வெல் ஆரியமயப் படுத்தப் பட்ட “திராவிட மொழி” என்ற அடையாளத்தைத் தான் தமிழுக்குத் தந்தார். பிராமண ஆதிக்கத்தினால் வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சாதிகள் தங்களை உயர்த்திக் கொள்ள ஆரியமயக் கருத்தியல்களையும், புனைவு களையும் சார்ந்திருந்தன.

சற்சூத்திரர், சத்திரியர், யாதவர் என்பது போல் ஆதி திராவிடர் என்ற ஆரியமயப் பெயரும் தமிழ்ச் சாதிகளுக்குச் சூட்டப்பட்டன.

தமிழ்ச் சாதிகள் தங்களை ஆரியமயப்படுத்தி உயர்த்திக் கொள்ள முனைந்ததேன்? அதற்கு இருகாரணங்கள் இருக் கின்றன. ஒன்று, அவை அனைத் தும் அயலார் ஆட்சியில் அதனதன் உயரத்திலிருந்து தாழ்த்தப்பட்டு வீழ்ந்து கிடந் தன. அந்த அயலார் ஆட்சியில் ஆரியம் கோலோச்சியது. இரண் டாவதாக, தமிழ்ச்சாதி ஒவ் வொன்றிற்கும் பின்னால் அச லான புராணப் புனை கதைகளோ, மெய்யியல் கருத்து களோ கிடையாது. சாதி என்ற சொல்லே தமிழ் அன்று. ‘சாதி’ யை ஞாயப்படுத்துவதற்கான மெய்யியலையும் புனைகதை களையும் தமிழர்களுக்கு ஆரியம் தந்தது; அதாவது வர்ணாசிரத் தர்மம் தந்ததும்.

தமிழில் உள்ள ‘குலம்’ ‘குடி’ என்ற சொற்கள் சாதியைக் குறிக்க வில்லை. மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடித் தமிழர்களிடம் இன்றும் ‘குலம்’ என்ற பிரிவு இருக்கிறது. அது சாதியைக் குறிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட இனக் குழுவை அடையாளப்படுத்தும் சொல்லாகவே ‘’குலம்’’ இருக் கிறது. அக்குல மக்களிடம் சாதிப் பிரிவினையோ, தீண் டாமைக் கொடுமையோ இல் லை.

‘குடி’ என்ற சொல் ஒரு குடும்பத்திலிருந்து கிளைத்த குருதி உறவுள்ள மக்களைக் குறிக்கிறது. குடி என்பது சாதியன்று. ‘குடிப்பெருமை’ என்பது உயர்ந்த பண்பும் புகழும் கொண்ட ஒரு குடும்பப் பெருமையையே குறிக்கிறது.

ஆரிய சமூகம், வர்ணாசிரம தர்மத்தைக் கொண்ட்து. இன்றும் ஆரியப் பார்ப்பனர் களுக்குத் தனித் தனிக் கோத் திரம் உண்டு. அக் கோத்திரம் தமிழில் சொல்லப்படும் குலமும் அன்று, குடியும் அன்று. பெரும் பாலும் முனிவர்களின் பெயர் களில் ஆரியக் கோத்திரங்கள் அமைந்துள்ளன. அம் முனிவர்கள் அனைவரும் வட நாட்டில் குறிப்பாக ஆரிய வர்த்தத்தில் கதைக் களங்கள் கொண்டவர்கள் ஆவர். கௌ சிக கோத்திரம், வசிஸ்ட கோத்திரம், விசுவாமித்ர கோத் திரம், காஸ்யப கோத்திரம் போன்ற சிலவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

தமிழ்ச்சாதி எதற்கும் கோத் திரப் பின்னணி கிடையாது. பிற்காலத்தில், ஆரியம் கோ லோச்சிய காலத்தில், தாழ்ந்து போன தமிழர்கள் தங்கள் சாதிகளை ஆரியமயப்படுத்தி உயர்வுகாண முயன்றனர். அம்முயற்சியின் காரணமாக தங்கள் சாதிகளைப் பார்ப்பனர் களைப்போல் ‘ரிஷி’ கோத்திரத் துடன் இணைத்துப் புனைவுகள் உருவாக்கிக் கொண்டனர்.

படையிலும் வேளாண் மையிலும் இருந்த பல பிரிவுத் தமிழர்களை ஒருங்கிணைத்து பெருந் தொகுப்பாக உருவானது வன்னியர் சாதி. அவர்கள் பிற்காலத்தில் ஆரியபாணியில் தங்களை வன்னியர்குல சத்திரி யர்கள் என்று அழைத்துக் கொண்டனர். ஆரியப் பார்ப் பனர்கள், தென்னாட்டு அரசர் களையே சூத்திர அரசர்கள் என்றுதான் அழைத்தனர்.

அவர்களின் கருத்துப்படி பேரரசன் இராசைராசன் கூட சூத்திர அரசன்தான். வன்னிய மன்னர்களும் சூத்திரர்கள் தாம். அவ்வாறு ஆரியப் பார்ப்பனர் தமிழர்களைத் தங்களுக்குக் கீழானவர்களாக வகுத்துக் கொண்டதால்தான் வேளாளர், முதலியார், கள்ளர், தேவர், வன்னியர், உள்ளிட்ட அனைத் துத் தமிழர்களையும் சூத்திரர் என்றே அழைத்தனர். அனைத் துத் தமிழர்களுக்கும் எதிரான தீண்டாமையைக் கடை பிடித்தனர்.

இப்போது கோயில் குருக் களாக உள்ள பார்ப்பனர்கள் ஆதிசைவர் என்றிருந்த தமிழ ரேயாவர். இந்தக் குருக்கள்கள் தங்களைப் “பிராமணர்கள்’’ என்று கூறிக் கொண்டாலும் ஆரியப் பார்ப்பனர்கள் இந்தக் குருக்கள்கள் மீதும் ஒரு வகைத் தீண்டாமைக் கொள்கையைத் தான் கடைபிடிக்கின்றனர். இன்றும் இந்தக் குருக்கள் பிராமணர்களுடன் தமிழகத்தில் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் திருமண உறவு வைத்து கொள்வதில்லை. அவர்களைத் தங்களுக்குச் சம்மானவர்களாகக் கருதுவதுமில்லை; சம்மானவர் களாக நடத்துவதில்லை. நிலை மை இவ்வாறிருக்கும் போது வன்னியத் தமிழர்களை ஆரியச் சத்திரியர்களுக்குச் சம்மாக ஆரியப் பார்ப்பனர்கள் கருது வார்களா? அவர்களைத் தமிழ்ச் சூத்திரர்களாகத்தான் நடத்தினார்கள்.

ஆனால் வன்னியர்கள் அனைவரும் சம்பு மகரிஷியைத் மூலவராகக் கொண்டவர்கள் என்று ஆரியமயப் புனைவுகள் பின்னர் ஏற்பட்டன. திருவா னைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் நாவல் மரத்தடியில் தவம் செய்த ஜம்பு மரிஷியின் வழித் தோன்றல்கள் என்று கூறப்படுகிறது. ஜம்பு என்றால் சமற்கிருத்ததில் நாவல் மரம் என்று பொருள்.

வன்னியர்களில் நாட்டார், கவுண்டர் நாயகர், படை யாட்சியார், மழவராயர் என்று பல பிரிவுகள் இருந்தாலும் இவை ஆரியப் பார்ப்பனர் களுக்கு இருப்பது போன்ற கோத்திரங்கள் அல்ல; இவற் றுக்குத் தனித் தனி ரிஷிகள் அடிப்படையில் அமைந்த கோத்திரப் புனைவுகள் கிடை யாது.

கள்ளர் வகுப்பில் சோழகர், நாட்டார், மேற்கொண்டார், வாண்டையார் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. இப் பிரிவு எதுவும் கோத்திரப் பின்னணி கொண்டிருக்க வில்லை. இப்பிரிவுகள் அனைத் தும் வகையறா என்ற தலைப் பிலும் உட்பிரிவு என்ற அடிப் படையிலும் இருக்கின்றன.

நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பில் ஒன்பது கோயில்களின் பெயரில் வகை யறாக்கள் உள்ளன. வைரவன் கோயில் வகையறா, பிள்ளை யார்ப்பட்டிக் கோயில் வகை யறா, நேமத்தான் கோயில் வகையறா என்பவை அவற்றுள் சில. இவற்றில் எதுவும் கோத் திரம் அன்று. இவற்றுக்குக் கோத்திரப் புனைவுகளும் கிடையாது.

கொல்லர், பொற்கொல்லர், தச்சர் எனப்படும் தமிழர்கள் தங்களை ஆரியமயப்படுத்தி விசுவகர்மா என்று அழைத்துக் கொண்டனர். தாங்கள் ‘சொர்ண ரிஷி’ கோத்திரம் என்றும் கூறிக் கொண்டனர். “சொர்ணம்’’ என்றால் தமிழில் பொன்(தங்கம்)! தமிழர்களில் மிக உயர்ந்த பொறியாளர் களாகவும் தொழில் நுட்ப வல்லுநர்களாகவும் விளங்கிய இவர்கள் ஆரியம் கோலோச்சத் தொடங்கியப் பின் பழைய மதிப்பை இழந்தார்கள். தங் களை உயர்த்திக் கொள்ள ஆரியக் கோத்திரத்தை தங்க ளுக்குப் புனைந்து கொண்டனர்.

பள்ளர் என்றும் மள்ளர் என்றும் அழைக்கப்படும் தமி ழர்கள் தங்களைத் தேவேந்திரர் என்று அழைத்துக் கொள்வதும் ஆரியமயமாக்கலின் ஒரு கூறே!.

ஆரிய வர்ணாசிரம தர்மத் தால் தமிழ்ச்சாதிகள் இழி வடைந்தனவே தவிர உயர் வடையவில்லை. தமிழர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள தமிழ் இனத்தின் அடிப்படை நெறி யாகிய ‘’ மனித சமத்துவம்’’ என்ற கொள்கையைப் பின் பற்றுவதொன்றே சரியான பாதையாகும்!

மனித குல வளர்ச்சியில் ஐரோப்பிய இனங்கள் உள் ளிட்டுப் பல்வேறு உலக இனங்களில் குலத் தொழில் அடிப்படையில் சாதியின் மூலக் கூறுகள் இருந்தன. என்கிறார் அம்பேத்கர். ஆங்கிலேயரின் பெயரோடு இன்றும் ஒட்டி யுள்ள கோல்டுஸ்மித், சூமேக்கர் போன்றவை ஒரு காலத்தில் குலத்தொழில் அடிப்படையில் விளங்கிய சாதிக்கூறின் மிச் சங்களே. மன்னராட்சிகள். உருவாகிப் படையெடுப்புகள் நடந்த போது, போரில் பங்கு பெற்ற வீரர்களுக்குப் படை மானியமாக நிலங்களும், மற்ற செல்வங்களும் மன்னரால் வழங்கப்பட்டன. உடைமை யற்றிருந்தவர்கள் உடைமை பெற்று மேம்பாடு பெற்றனர். குலத் தொழிலோடு கட்டுண்டு கிடக்காமல் நிலக்கிழார் களாகவும் சிறு நில உடைமை யாளர்களாகவும் வணிகர் களாகவும் மாறினர் என்பார் அம்பேத்கர். ஐரோப்பிய சமூகத் தில் குலத் தொழில் அடிப் படையில் அமைந்த தொடக்க நிலைச் (Primordial) சாதி வடிவம் தகர்ந்த வரலாற்றை இவ்வாறு விளக்கினார் அம் பேத்கர்.

ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆரிய வர்ணாசிரம தர்மம் குலத் தொழில் அடிப் படையில் அமைந்திருந்த உழைப்புப் பிரிவினையை, தொ டக்க நிலைச் சாதி வடிவங்களை பிறப்பு அடிப்படையில் வளர்த்தன. ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் இல்லாதிருந்த தொடக்க நிலைச் சாதி வடிவங்களை வளர்த்தது மட்டு மின்றி, பிறப்பின் அடிப் படையில் அவற்றிற்குள் உயர்வு தாழ்வும் தீண்டாமையையும் உருவாக்கியது வர்ணாசிரம தர்மம்.

எனவே, தமிழ்ச் சாதிக் கென்று தனியே மெய்யியலோ, தற்சார்பான கோத்திரப் புனை வுகளோ கிடையாது. கூறப்படும் புராணப் புனைவுகள் அனைத் தும் ஆரியச் சார்பானவை; சமற்கிருத மயமாக்கலால் உருவானவை.

வர்ணாசிரம தர்மத்திற் கென்று மெய்யியல் உண்டு அதன் சாரம், கர்மம், தர்மம், தண்டம் என்பதாகும். ஒவ்வொ ருவரும் முற்பிறவியில் தாம் செய்த கர்ம வினைக்கேற்ப இப்பிறவியில், ஒரு வர்ணத்தில் பிறக்கிறார்கள். இப்பிறவியல் பிறந்துள்ள வர்ணத்திற்குரிய கடைமைகளை அவர்கள் நிறை வேற்ற வேண்டும். அதுதான் அவர்களுக்குக் கடவுளால் விதிக்கப்பட்ட தர்மமாகும். அவ்வாறு தாம் பிறந்த வர்ணத்திற்குரிய கடமைகளை நிறைவேற்றாதவர்களை, அரசும், கடவுளும் தண்டிப்பர். தண்டிப் பதற்குரிய அடையாளச் சின் னம்தான் ஆச்சாரியர் கையி லிருக்கும் தண்டம். இவாற மைந்த கர்ம- தர்ம- தண்டக் கோட்பாடுதான் வர்ணாசிரம தர்மத்தின் மெய்யியல் சாரம். இவ்வாறான மெய்யியல், சாதிக்குக் கிடையாது.

சாதியின் தோற்றம் வேறு. வர்ணாசிரமத்தின் தோற்றம் வேறு. ஆரியச் சித்தாந்த வாதிகளின் உருவாக்கம் வர்ணா சிரமதர்மம். குலத்தொழில் அடிப்படையில் உருவானது தொடக்க நிலைச் சாதிவடிவம். அந்நிலையில் சாதி ஏற்றத் தாழ்வோ; ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்தில் மாறிக் கொள்ள தடையோ இல்லை. காலப்போக்கில் குலத் தொழிலை வர்ணாசிரம உள்வாங்கிக் கொண்ட்து. பிறப்பை அடிப் படையாகக் கொண்டு மனிதர் களின் வேலைகளையும் சமூகத் தகுதியையும் தீர்மானித்தது வர்ணாசிரமம். பெற்றோர் தொழிலைப் பிள்ளைகள் இயல் பாகக் கற்றுக் கொண்டு சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அதைச் செய்தனர் என்ற நிலையை மாற்றியது. பிறப்பின் அடிப்படையில் அவரவர்க்கு உரிய தொழில் கட்டாயமாக்கப்பட்டது.

வர்ணாசிரம தர்மம் தமிழ் இனத்தில் உருவான கருத்தியல் அன்று. அது ஆரிய இனத்தின் உருவாக்கம். எனவே, தமிழ்ச் சாதி எதுவும் ஆரியச்சாதி யுமன்று; அனைத்திந்தியச் சாதியுமன்று. ஆனால் ஆரிய வர்ணாசிரம தர்ம மெய்யியல் தான் தமிழ்ச்சாதிகளை மேலும் மேலும் தனித்தனிக் குழுக் களாக இறுக்கப்படுத்தி நீடிக்கச் செய்து வருகின்றது.

அனைத்திந்தியச் சார்பு அரசியல், ஆன்மிகம், பண்பாடு, மொழி போன்ற துறைகளில் நீடிக்கும் வரை, தமிழ்நாட்டில் சாதி ஒழிப்புபிற்கும் வாய்ப் பில்லை; சமத்துவத்திற்கும் வாய்ப்பில்லை.

இந்திய அரசுக் கட்டமைப் பில் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் முகாமையான இடம் வகிக்கின்றன. தமிழர்களுக்கோ இறையாண்மையுள்ள சொந்த அரசில்லை. இந்திய அரசின் கீழ் காலனி அரசாக மாநில அரசைப் பெற்றுள்ளனர். இந்திய அரசுதான் வர்ணாசிரம தர்மத்தின் தலைமைப் பாது காவல் பாசறை. இந்திய அரசு என்பது அதன் அமைச்சரவை, அதிகார வர்க்கம்(Bureaucracy) உச்சநீதிமன்றம், முப்படைகள் உள்ளிட்டவற்றைக் குறிக்கும்.

தனி நாடு கேட்டுக் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் பேரெழுச்சியை உண்டாக்கிய போது, அது பார்ப்பனியத்திற்கும் சாதி உயர்வு தாழ்வுக்கும் எதிரான கருத்துகளையும் இணையாகப் பரப்பி வந்தது. 1950களில் 1960களின் முற்பாதியில் அக்கழகத்தைச் சேர்ந்த பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் தங்கள் இல்லத் திருமண அழைப்பிதழ் களில் சாதிபோட்டுக் கொள்ள மாட்டார்கள். அல்லது சாதி போட்டுக் கொள்ள கூச்சப் பட்டார்கள். தங்கள் சாதியைப் பகிரங்கப் படுத்திக் கொள்ளத் தயங்கினார்கள்.

அக்கழகம் தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்ட துடன், பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டது. இப்பொழுது தி.மு.க.வையும் அக்கழகத்திலிருந்து பிரிந்த கழகங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் சாதியைப் பகிரங்கப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள் கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாதிப் பெருமையைக் காட்டிக் கொள் வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள்.

இச்சூழல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினரிடையே புதியபுதிய சாதிக் கட்சிகளும் சாதி அமைப்பு களும் தோன்றிட வாசல் திறந்துவிட்டது. இப்போக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பிலும் புதிய புதிய சாதிக் கட்சிகளை உருவாக்கியது.

அனைத்திந்திய அரசியல் தமிழகத்திற்கு வழங்கிய பரிசு சாதித் தீவிரம்தான்!

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகவும் குறைந்த 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல் படுத்த இந்திய அரசு மறுத்து வந்தது. நெருக்கடிக்களுக்கு உள்ளான இந்திய அரசு ஒரு கட்டத்தில் மண்டல் குழுவின் அப்பரிந்துரையைச் செயல் படுத்த முனைந்த போது உச்ச நீதிமன்றம் முட்டுக் கட்டை போட்டது. புதிய ஆணைகள் சட்டங்கள் மூலம் அத் தடைகளை ஓரளவு கடந்தா லும், இன்னும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மருத்துவம் போன்ற படிப்பு களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனைத்திந்தியா என்பது ஆரியத்தின் கோட்டை; வர்ணாசிரமத்தின் பாசறை. தமிழக ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்க ளை அனைத்திந்திய அடையா ளங்களோடு இணைத்துக் கொள்ள முயல்வது தங்கள் கால்களில் தாங்களே விலங்கு மாட்டிக் கொள்வது போன்ற செயலாகும்.

Pin It