ஆர்.எஸ்.எஸ். - பட்டேல் உறவுநிலை

பட்டேல் காங்கிரசில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அப்படியே காங்கிரசுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். அது நேருவின் கையை பலவீனப் படுத்தி, தன்னைப் பலப்படுத்திக் கொள்ள அவர் எடுத்த முயற்சியாக இருக்கலாம். ஆர்.எஸ். எஸ். காரர்களுக்கு தன்னலக்குறிக்கோள்கள் இல்லை என்று கருத்துரைத்தார். இந்து மகா சபையினரையும் காங்கிரசில் சேர அழைத்தார். ‘இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் மட்டுமே என்று நீங்கள் கருதியிருந்தால், தவறு செய்கிறீர்கள்’ என்று கூறினார்.

‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் அறிவுத் திறனைப் பயன்படுத்தி சாதுர்யமாக செயல்பட வேண்டும்’ என கூறிய பட்டேல், இஸ்லாமியர்களை நோக்கி, ‘நாட்டுப்பற்று அற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். இன் னமும் இரண்டு குதிரைகளில் சவாரி செய்கிறவர்கள் (முடிவெடுக்காதவர்கள்) இந்துஸ்தானத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்றார் இந்தியா என்று சொல்லை விட இந்துஸ்தானம் என்ற சொல் பட்டேலுக்கு இனிப்பானது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அடக்கி வைக்க வேண்டும் என்று கோருவோர் காங்கிரசில் இருந்தனர். பட்டேல் அவர்களுக்குக் கூறினார்.

‘காங்கிரசின் அதிகாரமான இடத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகார நிலையைப் பயன்படுத்தி ஆர். எஸ். எஸ் அமைப்பை நொறுக்கிவிடலாம் என்று கருது கிறார்கள். ‘தடி’ எடுத்து ஓர் அமைப்பை அடக்கி விட முடியாது. மேலும் ‘தடி’ என்பது திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்குதான். தண்டம் எடுப்பது அதிக பலனைத்தராது. அது மட்டுமல்லாது, ஆர்.எஸ். எஸ். அமைப் பின் திருடர்களோ கொள்ளைக்காரர்களோ அல்லர். அவர்கள் தேச பக்தர்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு மட்டுமே மாறுபட்டது. காங்கிரசுக் காரர்கள் அவர்களை அன்பால் வெற்றி கொள்ள வேண்டும் (‘For a United India’, Speeches of Sardar Patel, Publi cation Division, Govt. of India, pp.64-69; A.G.Noorani, Patel’s Communalism, p.15)

நேரு வெளிநாடு சென்றிருந்த நேரம், அவர் அருகே இல்லாததைப் பயன்படுத்தி, 1949 நவம்பர் 10ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரை காங்கிரசில் சேர அனுமதித்து தீர்மானம் இயற்றினார் நேரு திரும்பி வந்து, நவம்பர் 17 அன்று இத் தீர்மானத்தை இரத்து செய்தார்.

பட்டேலும் அவர் குழுவினரும் நேருவுக்கு ஒரு தொல்லையாகவே இருந்தனர். நேரு தன் அமைச்சரவையைக் கூடத் தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. 1947 ஜீலை 24 அன்று காந்தி நேருவிடம் அவரது முதலாவது அமைச்சரவையில் அபுல்கலாம் ஆசாத்தை சேர்க்க வேண்டாம் என்றார். காரணம் சர்தார் பட்டேல் அதை எதிர்க் கிறார் என்றார். இந்திய விடுதலை வீரரும், அறிஞரும், சமய சார்பற்ற வருமான அபுல் கலாம் ஆசாத்தின் நாட்டுப் பற்றைப் பொய்யானது என்று லக்னோவில் பேசினார்.

vallabhaipatel 600

காந்தி கொலையும், பட்டேலின் போக்கும்

1948 சனவரி 30ஆம் நாள் காந்தி டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் அங்கேயே வழிபாட்டுக் கூட்டத்திற்குச் சென்று கொண் டிருக்கும் போது மாலை 5.12 மணிக்கு நாதுராம் விநாயக் கோட்சே என்ற சித்பவன் பிரா மண இந்து வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாலை 4 மணிக்கு வந்திருந்த பட்டேலுடன் ஒரு மணி நேரமாக நேருவும் பட்டேலும் ஒத்துப்போக வேண்டியதன் அவசியம் குறித்து வாதாடிக் கொண்டிருந்தார். இடம் பெயர்ந்து அல்லல்படும் இஸ்லாமியர் அவரவர் இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், மசூதிகளில் குடியேறிய இந்துக்கள் வெளியேற வேண்டும் என்றும், மதக்கலவரம் நிற்க வேண்டும் என்றும், பாகிஸ்தானுக்குச் சேர வேண்டிய 55 கோடியை நேருவும், பட்டேலும் கொடுத்து விட வேண் டும் என வலியுறுத்தி அனைத்து சமூகத்தினரும் கலவரத்தை நிறுத் திக் கொள்ள உறுதி கொடுத்தால் மட்டுமே உண்ணா நிலையைக் கைவிட முடியும் என்று கூறி மேற்கொண்ட அவரது உண் ணாநிலை சனவரி 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கலவரமும் நின்றி ருந்தது.

பட்டேல் காந்தியின் உண்ணா நிலை தன்னை எதிர்த்தே நடப்பதாகக் கருதினார். காந்தியாரிடம் பட்டேல் கொண்ட முரண்பாடு இயல்பானது. மதவாத பட்டேலால் காந்தியின் சமயசம உணர்வைச் சகிக்க முடியவில்லை. கலவரம் குறித்து காந்திக்குக் கிடைக்கும் தகவல்கள் தவறானவை என்றார்; முஸ்லிம்கள் குறை கூறவோ பயப்படவோ தேவை இல்லை என்றார்.

“பட்டப்பகலில் டெல்லியில் முஸ்லிம்கள் கொலைசெய்யப் பட்டு வந்த அந்தக் காலத்தில் ஜவகர்லாலின் குற்றச்சாட்டுகள் அடியோடு புரிந்து கொள்ள முடியாத வையாக இருக்கின்றன என்று அவர் (பட்டேல்) அமைதியாக காந்தியிடம் தெரிவித்தார்’’. (மௌலானா அபுல்கலாம் ஆசாத், ‘இந்திய விடுதலை வெற்றி’ (India Wins Freedom), அடையாளம், 2010, பக்.278)

சர்தார் படேலின் உளநிலை காந்திக்கு உறுத்தலைத் தந்தது. காந்தியின் கடைசி (15ஆவது) உண்ணாநிலை தொடங்கிய போது, பட்டேல் காரணமில்லாமல் உண் ணாநோன்பைக் காந்தி மேற் கொண்டுள்ளதாகக் குறை கூறி னார். அதற்கு பதிலாகக் காந்தி ‘என் கண்களையும் காதுகளையும் நான் இன்னும் இழந்து விடவில்லை.’ என்று பதில் கூறினார். (மேலது, பக்.281)

தன் உண்ணாநிலை கலவரக் காரர்கள் கண்ணைத் திறந்து விடும் என்று காந்தி கூறியதும் சர்தார் பட்டேல் காந்தியிடம் கடுமையாகப் பேசினார்; அவர் குரலை உயர்த்திப் பேசியதை ஆசாத்தம் நூலில் பதிவு செய்கிறார். (மேலது, பக்.282). பட்டேல் பம்பாய்க்குப் புறப்படு வதாகக் கூறிவிட்டு,

“எனக்கு செவி சாய்க்க காந்திஜி தயாராக இல்லை, உலகத்தின் முன் இந்துக்கள் முகத்தில் கரிபூச அவர் உறுதி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.’’ (மேலது.)

பட்டேல் புறப்பட்டுச் சென்று விட்டார். ஆனால் காந்தியின் உண்ணாநிலை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

அகண்ட பாரதம் ஆரிய மேலாண்மை, வருணாசிரமப் பாதுகாப்பு, சித்பவன் பார்ப்பன அரசியல் தலைமை ஆகியவற்றை யெல்லாம் கொண்ட இந்துராஷ் டிரத்தைத் தங்கள் இலக்காகக் கொண்ட இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காந்தியை கொலை செய்துவிட ஆலாய்ப் பறந்தனர்.

காந்தியாரைக் கொலை செய்ய ஐந்து முறை முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய ஐவருள் ஒருவரான வி.டி.சாவர்க்கரின் வாழ்த்துக்களைப் பெற்று நாது ராம் கோட்சே, நாராயண் ஆப்தே, மதன்லால் பாவா, திகம்பர் பாட்கே, கோபால் கோட்சே, கார்கரே போன்றோர் டில்லி வந்திருந்தனர்.

நான்காவது முயற்சியாகக் காந்தி யைக் கொல்ல மதன்லால் பாவா மேற்கொண்ட முயற்சி (20 சனவரி 1948) தோல்வியுற்றது. மதன்லாலை ஒரு கிழவி பிடித்துக் கொடுத்தாள். இதன்பிறகு வி.டி.சாவர்க்கர் மீது சந்தேகம் விழுந்தது.

பிற்காலத்தில் 1965 மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.கபூர் விசாரணை குழு, ‘அனைத்து உண்மைகளையும் சேர்த்துப் பார்த்தால் சாவர்க்கரும் அவருடைய குழுவினருமே காந்தி யைக் கொலை செய்ததாகத் தெரி கிறது’ என்று உறுதிபடத் தெரிவித்தது.

சனவரி 20ஆம் தேதி, மதன்லால் பாவாவின் வெடிகுண்டு வீச்சு தோல்வியடைந்தது. அவன் காவல் துறையிடம் தான் சாவர்க்கரை சந்தித்து விட்டு வந்ததையும், தன்னுடன் வந்த கோட்சே அடையா ளத்தை வெளியிட்டு விட்டான். இடத்தை விட்டுத் தப்பியோடிய நாதுராம் வினாயக் கோட்சே பூனா விலிருந்து வெளியாகும் மராத்தி இதழ் ‘இந்து ராஷ்டிரா’ வின் ஆசிரியர் என்றும் தப்பியோடிய நாராயண் ஆப்தே அவ்விதழின் உரிமையாளர் என்றும் காவல் துறைக்குத் தெரிந்து விட்டது.

கொலைகாரர்கள் குழுவில் ஏழு பேர் என்பதையும், தனது சகாக்களுடன் சாவர்க்கர் சதனில் இருந்ததையும் தெரிவித்தான்.

“மே மாதத்திலிருந்து காவல் துறை கண்காணிப்பில் இருந்து வரும் வீர சாவர்க்கரின் ஆதரவா ளர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார் கள் என்பதும் தெரிந்துள்ளது. அன்றிரவே சதிகாரர்கள் பற்றிய அடையாளங்கள் அறியப் பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ய டில்லியில் இருந்த சாதாரண காவலருக்குக் கூட வெகுநேரம் பிடித்திருக்காது ஆனால், நன்றாகத் தொடங்கப்பட்டஇந்த விசாரணை பின்னர் முறையாகத் தொடரப் படாமலும்,தீவிரமிழந்தும் போனது’’.

(டொமினிக் லேப்பியர் - லேரி காலின்ஸ், நள்ளிரவில் சுதந்திரம், அலைகள் வெளியீட்டகம், சென் னை, 1997, பக்கம்.563)

டில்லி காவல்துறை மெத்தனமாக இருந்தது. சதிகாரர்கள் பூனாவைச் சேர்ந்தவர்கள். பம்பாய் போலீஸ் உதவி கமிஷனர் ஜம்ஷித் நாகர்வாலாவிடம் பம்பாய் உள் துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் சதிகாரர்களைக் கண்டு பிடிக்கும் வேலையை ஒப்படைத் தார். அவர் முஸ்லிமும் இந்துவும் அல்லாதவர்,ஒரு பார்சி; மிகத் திறமையான அதிகாரி.

நாகர்வாலா என்ற பம்பாய் காவல்துறைத் துணை கமிஷனர் குற்ற அறிக்கை 1 இல் ‘சாவர்க்கரே இச்சதியின் பின் னணி என்பதைத் தெளிவு படுத்தி யது. காந்தி 30 சனவரி 1948 அன்று கொலை செய்யப்பட்டார். அதற்கு மறுநாள், (31 சனவரி 1948) நாகர் வாலா அரசுக்கு அனுப்பிய கடிதத் தில், கொலையாளிகளான கோட்சேயும், நாராயண் ஆப்தேயும் டில்லிக்குப் புறப்பட்டு வருதற்கு முன்பு சாவர்க்கரை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினர் என்று தெரிவித்திருந்தார்.

இது சாவர்க்கரின் மெய்க்காப்பாளர் காசர் மற்றும் செயலர் தம்ளே ஆகியோர் அளித்த தகவல் ஆகும். இதற்கு முன்பே சனவரி 14 மற்றும்17 தேதி களில் சதிகாரர்கள் சாவர்க்கரை சந்தித்திருந்தனர். சாவர்க்கரின் பணியாளர்கள் குறிப்பிட்டது கொலைப் பணிக்குப் புறப்படும் போது சந்தித்த நிகழ்ச்சி பற்றியது.’

காந்தி கொலை வழக்கில் தலைமை வழக்குரைஞராகத் தோன்றி வழக்கு நடத்தியவர் சர்தார் வல்லபாய் பட்டேல், அன்றைய துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆவார். காந்தியின் படுகொலைக்கு மறுநாளே நாகர் வலா கண்டுபிடித்த முக்கியத் தகவல்கள் நீதிமன்றத்தில் பேசப்பட வில்லை. சாவர்க்கரின் பணியாளர்கள் சாட்சிகளாக இறுதிவரை நிறுத்தப்படவே இல்லை, சாவர்க்கர் தண்டனையிலிருந்து தப்பினார்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில், காந்தியாரின் படு கொலை பற்றிய தகவல்களைத் திரட்ட வேண்டிய வேலைகளை முடுக்கிவிடும் பொறுப்பு பட்டேலுடையது. நேருவுக்கு பட்டேல் 27 பிப்ரவரி 1948இல் எழுதிய கடிதத் தில் காந்தியின் படுகொலை பற்றிய விசாரணயின் முன்னேற்றம் குறித்து தினந்தோறும் தொடர்பில் இருப்பதாகவும், இதை நடத்தியவர்கள் சாவர்க்கரின் கீழ் உள்ள இந்து மகாசபையின் ஒரு பிரிவினர்தான் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காந்தி கொலையில் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டி ருந்தார்.

1948 செப்டம்பர் 9 அன்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ். எஸ்) அமைப்பின் தலை வர் குருஜி கோல்வால்கருக்கு பட்டேல் எழு திய கடிதத்தில் ‘ஆர்.எஸ்.எஸ். பரப் பிய வகுப்பு வாத நஞ்சினால்தான் காந்தியை இழக்க வேண்டி வந்தது’ என்று எழுதினார். ஆனால், அதே கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ் தனது தேசப் பற்று செயல்பாடுகளை காங்கிரஸ் சேர்வதன் மூலமே செய்ய முடியும் என்று அழைப்பு விடுத்தார். பட்டேலின் பார்வை யில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தேசப்பற்றாளர் அமைப்பு.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய குருஜி கோல் வால்க்கர் 1948 நவம்பர் 13 அன்று கைது செய் யப்பட்டார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப அவருடைய ஆதரவா ளர்களும் அமைப்பினரும் டிசம்பர் 9ஆம் தேதி பல இடங்களில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இப்பிரச்சினைக்கு வல்லபாய் பட் டேல் ஒரு வழியைக் கூறினார். ஆர். எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு அமைப்பு வரைவைத் தயாரித்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கும் படிக் கூறினார். இதைப் பெற்றுக் கொண்டு (சூன் 1949) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான தடையை பட்டேல் நீக்கினார். (12சூலை 1949) மறுநாள் குருஜி கோல்வால்க்கரும் விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். மீது கட்டாயத் தின் பேரிலேயே பட்டேல் தடை விதிக்க நேர்ந்தது. 1949 ஜீலை 12இல் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப் பட்டது. பட்டேல் குருஜி கோல் வால்கருக்குக் கடிதம் எழுதினார். அதில். ‘எனக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், சங்கத்தின் மீதான தடை நீக்கப்பட்ட போது எவ்வளவு மகிழ்ச்சிய டைந்தேன் என்பது’ என்று எழுதி னார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாதுகாக்கிற வேலையை சர்தார் பட்டேல் செய்தார். ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபை முழுவதும் பாதிக்கப்பட்டு விடாமல், அகப்பட்டுக் கொண்ட அந்த சிலரோடு பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருந்தது. 1948 பிப்ரவரி 27இல் நேருவுக்கு எழுதிய கடிதத் தில், பட்டேல் ‘பாபு (காந்தி)வின் கொலைச் சதி பலரும் பொதுவாகக் கருதுகிறபடி விரிவான ஒன்று அல்ல. ஜின்னாவும் பேச்சுவார்த் தைக்குக் காந்தி போனதிலிருந்து அவருக்கு விரோதமாகப் போன சில மனிதர்களோடு மட்டுமே குறுகிப் போன ஒன்று’. காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் மகாசபைக்காரர்கள் வரவேற்றார்கள் என்பது உண்மை.

நமக்கு முன் உள்ள சான்றுகளின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபையின் வேறு எந்த உறுப்பினரையும் தண்டிக்க இயலாது என்றே நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டார். இது ஆர்.எஸ்.எஸ் செய்தது அல்ல என்பதே கடிதத்தில் வலியுறுத்தப் பட்ட செய்தி.

ஆர்.எஸ்.எஸ்க்கும் சாவர்க் கருக்கும், கோட்சேக்கும் உள்ள தொடர்பு மறுக்க முடி யாத ஒன்று. ஆர்.எஸ்.எஸ்ஸை உருவாக்கிய ஐந்து தலைவர்களுள் சாவர்க்கர் ஒருவர். கோட்சே அவருக்குக் கிடைத்த மிகச்சிறந்த சீடர். காந்தி யைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் சிலேயே வளர்ந்தவன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை யான கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என் பதை உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.இல் இருந்தோம் நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த் எல்லோரும் எங்கள் வீட்டில் நாங்கள் வளர்ந்ததை விட ஆர்.எஸ். எஸ்.இல் வளர்ந்த வர்கள் என்று சொல்வதுதான் பொருத்தம். ஆர். எஸ். எஸ்.தான் எங்கள் குடும் பம். நாதுராம் அதில் பவுத்திக் காரிய வாஹ் ஆக (Intellectual Worker) பணியாற்றினார்.

தன் வாக்குமூலத் தில் நாதுராம் தான் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு வெளியேறியதாகச் சொன்னார். காரணம், கோல்வால்கரும் ஆர். எஸ்.எஸ்சும் கொலைச் சம்ப வத்துக்குப் பிறகு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானது தான். ஆனால் நாதுராம் ஆர்.எஸ். எஸ்.ஐ விட்டுப் போகவில்லை.’’ www.sscnet. ucla.edu/southasia/History/Hindu_Rashtra/nathuram.html) நாதுராம் கோட்சேக்கும் ஆர். எஸ். எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று காந்தி கொலை வழக்கை முடித்தார்கள். சர்வர்க் கருக்கும் தொடர்பில்லை என்று கூறி அவரையும் காப்பாற்றினார்கள். பட்டேலைத் தவிர வேறு எவராவது உள்துறை அமைச் சராக இருந்திருந்தால் சாவர்க்கர் தப்பியி ருக்க முடியாது.

ஆனால், கொலைச் சதியிலிருந்து காந்தி தப்பித்திருப் பார். காந்தி சில வாரங்களில் கொல் லப்படுவார் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும், தகவல் உரிய காலத்தில் கிடைத்தி ருந்தும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்ய வில்லை? காந்தியை ஏன் காப்பாற்ற முடியவில்லை

நரேந்திர மோடி கோரும் மத சார்பின்மை வல்லபாய் பட்டேலிடம் இருந்தது. அது முஸ்லிம்கள் விரட்டப்படுவதை, கொத்துக் கொத்தாய் கொல்லப்படுவதை ஏற்றுக் கொண்டது. 2002இல் இஸ்லாமியர்களைக் குஜராத்தில் படு கொலை செய்த நரேந்திரமோடி தனக்கு முன் மாதிரியாக சர்தார் பட்டேலைக் கொள்வதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது.

Pin It