எதையோ பேசுவதாய் நினைத்து,
வேறெதையோ பேசுகிறேன்
பேசி முடிக்கும் முன்பாகவே
வேறொன்றாய்ப் புரிந்து கொள்கிறாய்.
மகிழ்விற்கான தருணங்களில்கூட
கனத்த மௌனமே
நம் இருவருக்கிடையில்...
புரிந்து கொள்ள முடியாமலே
பறிபோய்க் கொண்டிருக்கிறது
காலமும்
சந்தோசங்களும்...
- நந்தன், திருப்பூர்.