எப்போதும்
புதுப்பொலிவு
புத்தாடையாக
மிளிரும் உடைகள்
அரும்பிச் சிலிர்க்கும்
புன்னகை
இப்படி
புத்துணர்ச்சியுடன்
இருப்பதாய்ச் சொல்கிறார்கள்
நண்பர்கள்.
எதையும்
வெளிக்காட்டிக்கொள்ளாமல்
மறைப்பதற்கு
இந்த ஒப்பனைகள் தவிர்த்து
வழிவேறில்லை
என்பதைக்
காட்டிக்கொள்ளவில்லை
அவர்களிடம்.
உன்னுடன்...
ஊர் உணரும்
மௌன வெளிகளில்
உன் சொற்கள்
இசை கலந்து இனிக்கும்
ஒளிவெளியெங்கும்
பழுதில்லா
விழிகளால் பார்க்கிறேன்
காட்சியே இல்லை;
நீயே காட்சி.
- செம்பை முருகானந்தம்
RSS feed for comments to this post