குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் ஜீலை மாதம் பிறந்த பெண் குழந்தையின் பெயர் இது(மஞ்சி). இதன் தாய், தந்தையர் ஜப்பானியர்கள் ஆனால் இதை பிரசவித்தவர் ஓர் இந்தியப் பெண்., வாடகைத்தாய். மஞ்சி பிறப்பதற்கு முன்னதாக அந்தக் குழந்தையின் ஜப்பானியத் தாய் தந்தை விவாகரத்து பெற்றதால் நேரிட்ட குழப்பங்கள் நீரிமன்றத்தின் படிகளை எட்டிய போது, வாடகைத் தாய்மை பற்றிய எண்ணற்ற சட்டச் சிக்கல்கள் விவாதத்துக்கு வந்துள்ளன.

 திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு ஜோடியின் கனவுகளும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியதாகவே இருப்பது இயல்பு ஆனால்., குழந்தைப் பேறு கிட்டாத தம்பதியர் களின் எண்ணிக்கையும் குறை வாக இல்லைமண் பயனற்றுப் போனால் கரம்பு., பெண் பயனற்றுப் போனால் மலடு என்று ஓர் ஆணாதிக்க சமுதாயச் சொல்லாடல், கருத்தரித்துக் குழந்தை பெற முடியாத பெண்களை இழிவு படுத்துகிறது இந்த மலட்டுத் தனம் ஆணிடமும் இருக்கலாம் என்ற இயற்கை நியதி கூடப் புறத்தள்ளப்படுவதன் கொடுமையகவே, முதல் மனைவியைத் தள்ளி வைப்பதும், இரண்டாம் தாரத்தை மணம் புரிவதும் கூட மிக நியாயமானதாகவே சித்திரித்துக் காட்டப்படுவதுண்டு.

 ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் சேர்ந்துதான் புதிய உயிர் உருவெடுக்கிறது என்பது உடற்கூறு களில் நேரிடும் சில பாதிப்புக்களுக்கு காரணம். பரிணாம வளர்ச்சியாகப் தரித்த கரு, கருப்பையைச் சென்றடைய முடியாமல் போவதும் உண்டு. இந்தப் பிரச்சினைக் குத் தீர்வு காண அறிவியல் சோதனைக் குழாய் குழந்தை அதன் போக்கில் நிகழ்ந்ததுதான். முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்ற புதிய முயற்சி.

 ஆணின் உயிரணுவையும், பெண்ணின் கருமுட்டையும் சோதனைக் குழாயில் வைத்து சினைப்படுத்திய பின் அந்தக் கருவைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, இயல்பான தாய்மைப் பேறு முறையில் குழந்தை பிறக்கச் செய்வதுதான் இந்தப் புதிய சோதனை உலகத்தில் முதன் முதலாக இப்படி ஒரு சோதனைக் குழாய் முறையில் ஒரு பெண் குழந்தை ஜீலை 1978 இங்கி லாந்து நாட்டில் அந்தக் குழந்தையின் பிறப்பு ஒரு விஞ்ஞான சாதனை யாகப் போற்றப்பட்டது 25 வயதைக் கடந்த இயல்பான வளர்ச்சியை பெற்ற 30 அது இப்போது. லூயிபிரவுன் குழந்தையின் பெயர். பெண்ணாக இன்னும் வாழ்கிறது.

 அதே ஆண்டில் இந்தியா விலும் ஒரு சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது என்பது வெளிச்சத்திற்கு அதிகம் வராத உண்மை லூயிபிரவுன். பிறந்த அன்று துர்கா 3 அக்டோபர் 1978ல் 67 நாள்கள் கழித்து கானுப் பிரியா என்கிற அந்த சோத னைக் குழாய் பெண்ணின் பிறப்புக்கு விஞ்ஞான ரீதி யாக வழிவகுத்த டாக்டர் முகோபாத்யாவின் இந்தச் சாதனை அங்கீகரிக்கப்பட வில்லை என்பது மட்டுமல்ல; அவர் விரக்தியில் 1981ல் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்க்கையையே முடித்துக் கொண்டார். தங்களை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த அரிய விஞ்ஞான சாதனைகள் அப்போதிருந்தே பல விவாதங்கள் கிளம்பின.

 இவ்வாறு கருப்பைக்கு வெளியே உருவாக்கப்படும் உயிர்க்கரு கருப்பையில் செலுத்தப்பட்டுப் பின்னர் வளர்ந்து குழந்தையாகிப் பிரசவிக்கப் பட்டு வந்த பின்னர் அதன் உடலும், மூளையும் முழு வளர்ச்சி பெற்றதாக அமையுமா? அப்படி அமையாமல் போனால் அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்விகள் எழுந்தன.

 கூடவே, இந்த சோதனைக் குழாய்க் கருத்தரிப்பு முயற்சி என்பது, வேறொரு பெண்ணின் கருப்பையைப் பயன்படுத்திக் குழந்தை பிறப்பிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லாதா? அது வாடகைத் தாய்களை உருவாக்காதா? என்ற கேள்விகளும் கிளப்பப்ட்டன.

 காலப்போக்கில் சோதனைக் குழாய் குழந்தை என்பது ஒரு வெற்றிகரமான விஞ்ஞான நிகழ் வாக மாறிவிட்டது உலகத்தின் பல பகுதிகளிலும் இந்த முறையில்., குழந்தைப் பேற்றுக்காக ஏங்கிய தம்பதியினர் தங்கள் ஏக்கம் தீர்ந்து மகிழ்வடைவது நடைமுறைக்கு வந்தது.

 ஆனால், இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறையில் நடைமுறைப் பிரச்சினைகள் எழுந்தன. கணவன் மனைவியாக இணைந்த இருவரின் உயிரணுக்கருமுட்டையை இணைத்துக் கருத்தரிக்க வைப்பது சில நேரங்களில் சாத்திய மாகமல் போகலாம். இப்போத வேறொரு பெண்ணின் கரு முட்டையைப் பயன்படுத்தி அந்த ஆணின் உயிரணுவை இணைத்துக் கருக்கொள்ள வைத்தபின், மனைவியின் தாய்மைப் பேறு கருப்பையில் வளரத்துப் பிரசவித்த மட்டுமே அந்த மனைவிக்குச் சம்பவிக்கும் முறையில் உடலுற வுக்கு அப்பாற்பட்டு நிகழும் கருத்தரிப்பு என்ற முறையும் ஏற்றக்கொள்ள அந்தத் தம்பதியர் சம்மதிக்கலாம்.

 ஆனால், கணவன் மனைவி இருவரின் உயிரணு, கருமுட்டையை வைத்தே கருத்தரிக்கச் செய்த பின்னரும் மனைவியின் கருப்பை, கரு வளர்ந்து குழந்தையாகப் பிரசவிப்பதற்கு இயலாத தாக அமைந்து விடுகிற சூழலும் ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலைமையில்தான் தனக்குள் வளரும் சிசுவுக்கு எந்தவிதப் பங்களிப்பும் இல்லாத ஒரு மூன்றாவது பெண் தன் கருப்பையை மட்டும் அந்தக் குழந்தையின் பிறப்புக்குப் பயன்படுத்த இசையலாம் இதையே., கருப்பையை வாடகைக்கு விடுகிற ஏற்பாடு என்றும் அந்தப் பெண்ணை வாடகைத்தாய் என்றும் சொல்கிற புதிய நடைமுறைக்கு வழிவிட்டது.

 கருப்பைக் கோளாறுகள் காரணமாக வாடகைத் தாயை நாடுவது என்ற தேவையையும் கடந்து, பேறுககாலச் சிரமங்களைத் தவிர்ப்பது என்பதந்காகவே, தன் குழந்தையை ஈன்றெடுக்க வேறொரு பெண்ணின் கருப்பையை வாடகைக்குப் பிடிப்பது என்ற நிலையையும் சில தாய்மார்கள் எடுப்பதும் நிகழ்கிறது. சட்டப்படி இப்படி ஒரு மூன்றாவது நபரான வாடகைத் தாய் பிரசவிக்கும் குழந்தை, அந்த வாடகைத் தாயின் குழந்தையாகவே பதிவு செய்யப்படும். அந்தக் குழந்தையின் மரபணு ரீதியான பெற்றோர்கள் அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முறை.

 இந்த வாடகைத் தாய்மை என்பது இன்றைய உலகமயச் சூழலில் ஒரு சர்வதேசத் தொழிலாகவே மாறிவிட்டது என்பதுதான் இந்த விஞ்ஞான சாதனையின் பின் விளைவாக நேரிட்டுள்ள வக்கிரம். வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிக்கிற பெண், குழந்தை பிறந்த பின்னர் அதைப் பிரிய மறுக்கலாம். பிரிந்த பின்னரும் அவளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் நேரிடலாம்.

 வெளிநாட்டவர்கள் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாக அமர்த்திக் குழந்தை பெற்றுப் போவது என்பத இப்போதைய நிலையில் கோடி டாலர் வர்த்தகமாக நடைபெற்றுக் கொண்டிருக் கிறது என்பது அதிர்ச்சித் தகவல். இந்தியாவில் இந்த வாடகைத்தாய் களைப் பிடித்துத் தருகிற சேவையை மேற்கொள்ள 3 நிலையங்கள் உள்ளனவாம்.

 வாடகைத் தாய்மை என்பதை முறைப்படுத்துவதற்கான சில் நெறிமுறைததளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தயாரித்துள்ளது பிரச்சினைகளைத் தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பான பிரச்சனையை கையில் எடுத்துள்ள நிலையில் நம் நாட்டின் மாதர் அமைப்புகளும், பொறுப்பான பல ஆலோசனைகளை முன் வைத்துள்ளன. அக்கறையோடு பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்சனை இது.

(2008 செப்டெம்பர் 22, தினமனி)

Pin It