பின்புலம்
புதுகை சஞ்சீவி
மனிதர் மூலம்
பயணித்த
என் வார்த்தைகள்
அவரவர் இயல்புக்கேற்ப
பரிமாணம் பெற்று
உன்னை ஊடறுத்த போது
அது
நிகழ்ந்து விட்டது.
தன் போக்கில்
விளையாடிக் கொண்டே
குருட்டுப் பெரியவர்களின்
விரல்கள் பற்றி
அழைத்து வருகிறாள்
சிறுமி
வழி காட்டும்
வார்த்தைகளால் மட்டுமே
அதட்டிக் கொண்டு
வருகிறார்கள்
பெரியவர்கள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|