அ. இலட்சுமி காந்தன் கவிதை
தாம்பத்ய இரவை
எளிமையாக
பார்க்காதே
அறிவு கொண்டு
புணர நேர்ந்தால்
தோற்றுப் போக நேடும்.
எது வெற்றி?
எது தோல்வி?
நீடிக்கும் குழப்பங்களின்
உச்சியில் தான்
விடிகிறது பொழுது.
பகல் மறைத்த
உடல்களைக் கொண்டு
அலைகிறோம்
இரவுகளில் வெளிப்பட பயந்து
முனங்கலோ, இருமலோ
தூக்கத்தை கிழிக்கும்
ஆயுதமாய் மாறலாம்
இமை திறந்த வெளிகளில்
ஊற்றென வெளிவரும்
கண்ணீரை பதிந்து வை
வேறொருவன் படித்துப் பார்க்க
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|