புவி அறிவியல்
உயிர்த்தெழும் செடி
மு.குருமூர்த்தி
"உயிர்த்தெழும் செடி" என்று ஒரு தாவரம் இருக்கிறது. ஸீரோஃபைட்டா விஸ்கோசா (Xerophyta viscosa) என்பது அதன் அறிவியல் பெயர். இது 95 சதவீதம் காய்ந்துபோன பிறகும்கூட கொஞ்சம் தண்ணீர் விட்டால் மறுபடியும் பிழைத்துக் கொள்ளும். காய்ந்து போனாலும் உயிரைத் தாக்குபிடிக்கும். இதன் ஜீன் எது என்பதை கண்டுபிடித்து அதை நெல்லுக்கும் இதர பயிர்களுக்கும் வழங்கினால் நன்செய் பயிர்களை புன்செய் பயிர்களாக வறண்ட பூமியில் வளரச் செய்யலாம்.
ஆனால் ஜீன் மாற்று ஆய்வுகளில் பெரும்பகுதி தனியார் ஆய்வுக்கூடங்களின் அறிவுசார் சொத்தாக இருப்பதால் உண்மையான பசுமைப் புரட்சியைத் தருமா அல்லது இன்னுமொரு ஏழை பணக்கார போராட்டத்தைத் தருமா என்பது கேள்விக்குறி.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|