 |
கவிதை
தியானம்
சூர்யா
சிந்தனையின்றி
சிறிது நேரம்
ஒற்றைப் புள்ளிக்குள்
ஓராயிரம கோடி ஒளி வேகததில்
தடுமாற்றமின்றி
நழுவிக்கொண்டு.........
எங்கு போகிறோம்
என்கிற கேள்வியை
புள்ளிக்கு வெளியே
பரிதவிக்க விட்டபடி
கணநேரமா
கற்ப காலமா
என்பதை கணிக்கும்
திறமை இழந்தவனாய்
ஒப்பிட்டு பார்க்க
ஒன்றுமற்ற
கொடுத்து வைத்த
ஏழையாய்.......
கால வெளியை
தரிசித்தபடி
முடிவற்ற எதற்குள்ளோ
மேலேயா கீழேயா
என்றறியா இடையீடன்றி
பயனிப்பவனை
பார்க்க முடியாமல்
உணர்ந்தபடி........
திரும்பிச்செல்ல
மனமில்லா
திகைப்பிற்குள்
என்றென்றும்
எடுத்துச் சொல்ல
வழியறியா
ஆதங்கத்துடனும்
தோல்வி முகத்துடனும்
ஒரு
முழுமையான அடிமை - இங்கு
தலைவணங்கியபடி
- சூர்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|