 |
கவிதை
மகளே உன்னாலே...
சூர்யா
பூக்களின் பூரிப்புகளாலும்
சுவரெங்கும் புதுச்சித்திரங்களாலும்
வீடு நிறைகிறது மறுபடியும்.
கைக்கடிகாரம் தங்கவளையல்கள்
புத்தகங்கள் இன்னும் ஏதேனும் பரிசளித்து
பிரியங்களால் நிறைப்பது சிறப்புப்பெறும்.
அடைந்து கிடந்த அறைகள்தோறும்
மறைந்து தொங்கும்
புகைப்பட உருவத்திற்குள்ளும்
பாய்கிறது ஜீவவெளிச்சம்.
புன்னகை இழையோடத் துவங்கிட
தழும்புகள் தரித்த கசக்கும் கழிவுகள்
விடைபெறுகின்றன ஒருவழியாய்.
- சூர்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|