 |
கட்டுரை
பாரதிதாசன் - 115 சுபவீ
பாட்டுக்கு உரை எழுதிப்
பார்த்ததுண்டு
நீயோ
பெரியாரின் உரைகளுக்குப்
பாட்டெடுத்த பாவின் வேந்தன்!
பாட நூல்களில் நீ வெறும்
‘குடும்ப விளக்கு'
தேர்வுகள் முடிந்து
தெருவுக்கு வந்தபின்
உணர்ந்தேன் உன்னை
‘தமிழச்சியின் கத்தி'யாய்!
புரட்சிக் கவிஞனே,
உன் ‘அழகின் சிரிப்'பைப்
பத்திரப்படுத்தினோம்.
கொடியோர் செயல் அழித்திட நீ
கொடுத்த கொலைவாளை மட்டும்
எங்கோ தொலைத்துவிட்டோம்.
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|