 |
கவிதை
எனக்குப் பின்னால் இன்னொரு துப்பாக்கி
நிந்தவூர் ஷிப்லி
எனக்கு முன்னால் துப்பாக்கி
ஒன்று நீட்டப்பட்டுக்கொண'டிருக்கிறது...
எப்போது வெடிக்கும் என்பது பற்றி
எனக்குத்தெரியவில்லை..
அந்தத்துப்பாக்கி ஏந்தப்பட்ட
கரங்களுக்கும் அது தெரிந்திருக்காது...
பேசினால்
தூக்கப்பட்டிருக்கும் என் கைகளை
நான் கீழிறக்கினால்
அழுதால்
ஏன் சிரித்தாலும் கூட அது வெடிக்கச் செய்யப்படலாம்..
அது நிஜ துப்பாக்கிதானா..
உள்ளே குண்டுகள் நிரப்பப்பட்டிருக்குமா
என்பது பற்றி யாரிடம் நான் விசாரிப்பது..?
இந்தத் துப்பாக்கி
எத்தனை உயிர்களை தின்று தீர்த்ததோ யான் அறியேன்..
அசைவற்ற சிலையாக
எவ்வளவு நேரம் நான் நிற்பது?
சடுதியாக பின்னால் ஓடத்திரும்புகிறேன்..
எனக்குப் பின்னால்
எனது பின்மண்டையை குறிபார்த்தபடி
இன்னொரு துப்பாக்கி...
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|