 |
கவிதை
சிறகடித்து...
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
காரின் முன்புறம்
அமர்ந்தபடி
காலையில் கண்ட
வெண்புறா
திறந்த கதவுச்
சத்தத்தில்
தாவிப்போய்
தன் இருப்பிடமாய்
கொண்டது
இன்னொரு காரின்
இரு சக்கரங்களுக்கு
இடைப்பட்ட
இடமொன்றை.
அலுவலக வேலைகள்
அத்தனைக்கும் இடையில்
இன்னமும் சிறகடித்து மனதில்
இம்சையாய் அந்த வெண்புறா
இடம் மாறி
இருக்குமா - அந்த
இன்னொரு கார்
கிளம்பும் ஓசையிலும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|