 |
கட்டுரை
தவிப்பு ரிஷி சேது
தவிப்பு-1
முற்றிமலர்ந்த
மல்லிகையை
வண்டுதொடுவதை விட
அதை யாரோ
தட்டிப்பறிக்கையில்
மனம் கசக்கும் கண்களை....
தவிப்பு-2
யாரோ என நினைத்து
நீ என்னோடு
Phoneல்
பேசுகையில்
பேர் கேட்கமாட்டாயோ
என தவியாய் தவிக்கும்
என் மனசு...
தவிப்பு-3
தெருவோர
நாய்க்குட்டி
தாய்மடியில்
முட்டிக்கிடக்கையில்
மனமேங்கும்
தாய்தேடி....
தவிப்பு-4
வாசலில்
கிடக்கும் செருப்பு
பிச்சைக்காரரின்
தொடர் கெஞ்சல்
வேண்டுதலறுத்தது மனம்....
தவிப்பு-5
பசியெழுப்பும்
குரலில் குயிலோசை
ரயில்பயண குருட்டுப்பிச்சை
செவிடாய் பிறக்காத நான்
எனக்கும் பசி
செய்வதறியாது
சிதைகிறது மனம்...
தவிப்பு - 6
காற்றில் அலையும்
ஒற்றை மைனா
நீயில்லாத நான்
வீணே கழியும் பொழுதுகள்
என்னசெய்ய
முகம்தடவும் கைகள்...
தவிப்பு-7
நல்ல மழை
கையிலிருக்கும்
குடைதடுக்கிறது
நனையத் துடிக்கும் மனதை...
- ரிஷி சேது ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|