 |
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 02
எம்.ரிஷான் ஷெரீப்
எப்பொழுதும் மெய்யுரைக்குமுன்
கருவிழிகளில் தொலைந்தேனா
கருந்திரவ நீர்வீழ்ச்சியொத்தவுன்
நீள்கூந்தலில் மூழ்கிப் போனேனா
எப்பொழுதும் பரவசப்படுத்தும்
இதழ் நகையில் திருட்டுப் போனேனா
எல்லாம் நல்லதெனும்
நற்குணத்தில் புதைந்தேனா
எதிலுன்னிலீர்க்கப்பட்டேன்
பூவென்றெண்ணி உன்னில் மொய்த்த
வண்ணத்துப்பூச்சிகளைத் தென்றல் தினமுமுன்
சுவாசங்களோடு அழைத்துவருகையில்
அவற்றின் மயிர்க்கால்களைத் தொட்டு
உன் வாசனை மகரந்தங்களை முகர்ந்தபடி
நம் காதலின் வண்ணங்கள் சிலவற்றை
அவற்றுக்குக் கடனாகக் கொடுத்திருக்கிறேன்
நாளை வரும்போது மறவாமல் கேட்டு வாங்கிக் கொண்டு
ரோசாப் பூக்களையொத்த உன்
இதழ்ப் பூ, நகப் பூ வண்ணத்தினை மட்டும்
எனக்குத் தூதனுப்பு
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|