 |
கவிதை
இப்படிக்கு நட்பு பிரேம்குமார் சண்முகமணி
கவர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காதலித்துவிட முடிவதில்லை;
அவ்வகையில்
ஆசீர்வதிக்கப்பட்டது நட்பு!
***
நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்
***
முகந்தெரியா
உன் நட்பில் திளைக்கையில்
புரிந்தது
அகம் நக நட்பது...
***
உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமைக் காணும்
ஒரு குட்டி இந்தியா என்று
- பிரேம்குமார் சண்முகமணி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|