 |
கட்டுரை
உனக்குக் கிடைத்த சுதந்திரம் பச்சியப்பன்
தேசியக்கொடி தருகிறாய்
குத்திக் கொள்ள
முதலில்
நீ களவாடிய என் சட்டையைக் கொடு
உன்னால் பிடுங்கப்பட்ட
என் விழிகளுக்காக அழுகிறேன்
நீயோ
வானவேடிக்கை காட்டுகிறாய்
சேரியெங்கும்
எம் தாய்களின் ஒப்பாரி
எப்படிப் பாடுவேன்
நான் மட்டும் ஜனகனமன
எம்மக்களோ சிறையில்
நாடு மட்டும் எப்படி
சுதந்திரத்தில்
எம் கதறல்களை அரங்கேற்றுவீர்களா
உங்களது கலைவிழாவில்
ரத்தத்தில் மிதக்கும்
எங்களின் பிணத்தைச்
சுமந்துவரச் சம்மதிப்பீர்களா
தியாகிகளின் ஊர்வலத்தில்
எப்படி முடிகிறது உங்களால்
இழவு வீட்டில் இலைவிரிக்க?
துரத்தப்பட்ட எங்களின் பிள்ளைகள்
காடு மேடுகளில்
சுதந்திரக் கொடி ஏற்றிவிட்டுப் போகிறாய்
ஆளில்லாத பள்ளிக் கூடத்தில்
(‘உனக்குப் பிறகான நாட்களில்’ தொகுப்பிலிருந்து)
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|