 |
கட்டுரை
நடிப்பு முத்துக்குமார்
இரவல் வாங்கிய
கைக் குழந்தையோடு
“இரவல் தாய்”
வேடமிட்டாள்
பெண் ஒருத்தி!
இரவல் குழந்தையை
அலற வைத்து
அவள் நடத்தியதோ
“யாசித்தல்”!.
இரவல் குழந்தையின்
உதடுகள் அழுதாழும்
உள்ளம் மட்டும்
சிரித்தது.
நடைபயிலாத
நாம் கூட
இரண்டு குடும்பங்களுக்கு
உதவி செய்கிறோமே!
கட்டாய நடிப்பினால்
அது போதுமென்று!
- முத்துக்குமார் (muthhukumar@yahoo.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|