 |
கட்டுரை
செம்மொழியே, வணக்கம்! தொ. சூசைமிக்கேல்
வற்றாத சொற்பெருக்கும்
வளையாத கலைச்செருக்கும்
முற்றாது கொண்டவளே!
முத்தமிழே! உத்தமியே!
கற்றாரும் மற்(று)ஆரும்
காமுற்ற களஞ்சியமே!
சற்றேனும் சரிவற்ற
சரித்திரத்தின் சாட்சியமே!
எம்மழையும் தாராத
ஈரமிகு தீம்புனலே!
செம்மையொடு கோலோச்சும்
திருத்தமிழர்ப் பாமடலே!
எம்“மொழி”யும் வாழ்த்தவரும்
“எம்”மொழியே! செந்தமிழாம்
“செம்மொழியே”! உனக்கென்றன்
சிரம்தாழ்ந்த நல்வணக்கம்!!
- தொ.சூசைமிக்கேல் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|