 |
கவிதை
அறுந்த வால் மாலதிமைத்ரி
எனது கனவில் சிறுபூச்சியாய்
சுவரில் ஊர்ந்துகொண்டிருக்கிறாய் நீ
வாய்ப்பிளந்து உன்னை விழுங்க வருகிறேன்
அசைவின் அதிர்வில் சுதாரித்து
அறையளவு புடைத்தெழுந்து
என்னைக் கால்களால் கவ்வியிழுக்கிறாய்
திமிறலின் பலத்தில் எனது இடது மார்பு
பலூனாகப் பெருத்து வெடிக்க
அதிர்ச்சியில் விலகுகிறாய்
உனதருகில் எனது வால் துடித்துக்கொண்டிருக்கிறது
வாலற்ற என்னுடலைத் தேடிக்கொண்டே
உனது உண்டியலில் அறுந்த வால்களை
இன்னும் சேமித்துக்கொண்டிருக்கிறாய்
முளைத்து உன் முன்னே
அசைந்துகொண்டிருப்பது தெரியாமல்
- மாலதிமைத்ரி (malathimaithri@rediffmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|