 |
கவிதை
திரைச்சீலைகள் குட்டி ரேவதி
வீரகாவியங்களில் பெண்கள் அறைகளுக்கு நடுவே ஆடும்
திரைச்சீலைகளைப் போன்றவர்கள்
இருளும் வெளிச்சமும் இரு முகங்கள்
ஆண்களின் கட்டில்களுக்கு மறைப்பு தருபவை
பல உறவுகளின் சுமையெடுத்து
நரையெய்து எறியப்படுவார்கள்
தரையிறங்கி நடந்து வெளியேற இயலாதவை
கதவுகளைப்போல உரிமை கோருவதில்லை
திரைச்சீலைகள் தாசிகளையொத்தவை
ஆளில்லா அரண்மனையைக்கூட
ஆர்ப்பாட்டமாய் அலங்கரிப்பவை
காலையொளியில் வசீகரமாய் அசைந்து
மாலையில் பருவப்பெண்ணைப்போலக் குதூகலித்து
இரவின் வாயிலில்
துக்கம் அடைத்த தொண்டையுடன் தொங்குபவை
கிசுகிசுப்பையும் அழுகையொலிகளையும் தாங்குபவை
மெத்தென்ற தமது உடலைப்
பஞ்சணைக்கு எப்பொழுதோ விரித்தவை
குஞ்சங்கள் தொங்கச் சலங்கை பூட்டிய பெண்களைப்போல
வாசலோடு பரவசப்பட்டுக்கொள்பவை
விடுதலைக்காய்ப் போராடி
விளக்குத்திரியைப் பற்றி எரிந்துபோனவை
அரண்மனைகள்தாம் திரைச்சீலைகளை வேண்டுகின்றன
- குட்டி ரேவதி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|