 |
கட்டுரை
உன்னைக் காணவில்லை கற்பகம் இளங்கோவன்
இரவைக் கிழிக்கப் பார்க்கின்றன
என் கைகள்.
அந்திக் கருக்கலோடு
மங்கிப் போகிறேன் நானும்.
சாலை முடிகின்றது
காணவில்லை
உன்னைக் காணவில்லை
உருமுகின்ற மேகங்களின் கீழே
நான், ஏற்கனவே
நனைந்துபோய் நிற்கின்றேன்.
சம்பவங்களின் அங்கமாக இருந்தாலும்
என்னில் ஒரு சலனமில்லை.
பார்வை மட்டும் வீசிச் சென்றது
உன் நிழலா
அல்லது நீதானா?
விழுந்துவிட்டேனா
வளைந்துவிட்டேனா
வெறும் கற்பனைக் கனவுக்குள்
கரைந்துவிட்டேனா?
விழித்திரைகளை விலக்கி விலக்கி
வெறித்து வெகுதூரத்திலும் தேடுகின்றேன்
காணவில்லை...
உன்னைக் காணவில்லை!
- கற்பகம் இளங்கோவன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|