 |
கவிதை
உட்கார்ந்திருத்தல்... க.ஆனந்த்
எப்போதும்
சுகமாயிருப்பதில்லை
உட்கார்ந்திருத்தல்
எழுந்தால் போதும்
என்னுமளவு
சிரமமாகியும் போவதுண்டு
நின்று கொண்டிருப்பது கூட
நிறையவே சிரமமாய்
தெரிகிறது
இடம் கிடைக்காத
ஏமாற்றத்தில்
எழுந்து வழி விட்டவர்கள்
ஏமாளிகள் ஆவதுண்டு
உட்கார்வதற்கான
போட்டியே
வலிமையுணர்த்தும்
வழியென்றான பின்
உட்கார்ந்திருக்கும்
வரை தான்
உத்திரவாதம்
என்றுணராமல்
உட்கார்ந்திருப்பவரைக்
காட்டிலும்
உயர்வாகத் தெரிகிறது -
உட்கார்வது யாராயினும்
மாறாமல் உட்கார்ந்திருக்கும்
இருக்கைகள்
- க.ஆனந்த் (anandkgce@gmail.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|