 |
கட்டுரை
பேரழிவுகளின் ஆரம்பம் ம.ஜோசப்
காலம் என இல்லாத ஒன்றை
கிழமைகள் என்றும், மாதங்கள் என்றும்
வருடங்கள் என்றும்
கற்பித்துக் கொண்டோம்.
ஒரு மாபெரும் சமுத்திரத்தை,
பல பெயரிட்டு, பல கடல்களாக்கி
எல்லைகளையும் வகுத்துக் கொண்டோம்.
மாபெரும் நிலப் பரப்பை
சில எல்லைகளை கற்பித்துக் கொண்டு,
சண்டைகளையும், போர்களையும்
உருவாக்கினோம்.
இல்லாத மதத்தையும், சாதியையும்
கற்பித்துக் கொண்டு
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றோம்,
உடமைகளை அழித்தோம்,
ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தோம்.
சில காதல்களையும், நாம் விட்டுவிடவில்லை.
இந்த கற்பிதங்கள் யாவும்
இதுவரை,
இப்பூமி அறியாதது.
அது இவைகளை அறிந்து
கொண்ட போது
பேரழிவுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது.
- ம.ஜோசப் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|