 |
கட்டுரை
நுட்பம் ஜெயபாஸ்கரன்
கடைசி
அவலமாகத் தெரிகின்றன
மனிதர்களின் கண்களுக்குக்
கழுதைகள்.
எதன் பொருட்டேனும்
ஒரு கழுதை நுழைந்துவிடுகிறது
மனிதர்களுக்கிடையேயான
உரையாடல்களில்.
வேலை வாங்கிக் கொண்டே
கேலி செய்வதற்கு
உகந்ததாக வாழ்கின்றன
மனிதர்களுக்குக் கழுதைகள்.
வீடுகளைக்
குட்டிச் சுவராக்கியவர்களும்
குட்டிச் சுவர்களுக்குக்
கூரைபோட முடியாதவர்களும்
கழுதையைத்தான் வம்புக்கிழுக்கிறார்கள்,
பழமொழி வாயிலாக.
கட்டுண்டுக் கிடக்கும்
கழுதைகளுக்கு எதிராக
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன
ஏராளமான பழமொழிகள்.
கழுதைக்குத் தெரியுமா
கற்பூர வாசனை?
என்று கூடக் கேட்கிறார்கள்.
கழுதைக்குத் தேவைதானா
கற்பூர வாசனை?
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|