 |
கட்டுரை
பெருமிதம் ஜெயபாஸ்கரன்
அவமானப்படுத்தப்பட்டு
ஊர் திரும்பிய
அனுபவம் உண்டெனினும்
பட்டணம் குறித்த பெருமிதம்
மேலோங்கித்தான் இருக்கிறது
கிராமத்து மக்களுக்கு
என்றோ ஒரு காலத்தில்
தங்களுக்கு நேர்ந்த
பட்டணத்து அனுபவங்களை
அவ்வவ்போது கூடி அமர்ந்து
கூட்டியும் குறைத்தும்
சலிப்பின்றி பரிமாறிக் கொள்கிறார்கள்
மணிக் கணக்கில்.
சில சமயங்களில்
கிராம எல்லையில்
ஒருவனுக்கு
நான் சொல்லும் விடை
அடுத்த சில நிமிடங்களில்
கிராமம் முழுவதும் பரவி
மரியாதை தொனிக்க
எதிரொலிக்கிறது
''பட்டணத்துல இருந்து
வந்தது நீங்க தானா''
என்று.
எப்படிப் புரிய வைப்பது
இவர்களுக்கு
பட்டணத்திலிருந்து
வந்திறங்கும் எவரும்
கிராமத்திலிருந்துதான்
பட்டணத்துக்குப் போனார்கள்
என்பதை.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|